மதுரை மீனாட்சி அம்மன் கோவில் |
திருவிளையாடல் புராணம்
ஓம் நமசிவாய
மதுரைக் காண்டம்
திருக்கைலாயச் சிறப்பு
பாடல் --201
வரங்க டத்ரு ளெனமுது வானவர முனிவோர்
கரங்க டந்தலை முகிழ்த்திடக் கருணைசெய் தவிச்சை
உரங்க டந்துரை யுணர்வெலாங் கடந்தரு மறையின்
சிரங்க டந்தவ னிருப்பது திருக்கயி லாயம் [1]
கரங்க டந்தலை முகிழ்த்திடக் கருணைசெய் தவிச்சை
உரங்க டந்துரை யுணர்வெலாங் கடந்தரு மறையின்
சிரங்க டந்தவ னிருப்பது திருக்கயி லாயம் [1]
விளக்கம் ---201
வரங்களை தந்தருள வேண்டும் என்று ---பெரும் தெய்வங்களும் ,முனிவர்களும் --தங்கள் கரங்களை தலைமீது குவித்து வணங்கி வேண்டிநிற்க ----
--அவர்களுக்கு கருணைசெய்து ---
இயல்பாகவே பாசங்களை கடந்த ---வாக்கு மனம் ஆகியவற்றையும் கடந்த ---அருமையான வேதங்கள் கூறும் முடிந்த முடிவான பொருளையும் கடந்த வனாகிய இறைவன் இருப்பது --திருக்கயிலாயம் .
******************************************************************************
பாடல் --202
புரந்த ராதிவா னவர்பதம் போதுறை புத்தேள் பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன் வரந்த வாதுவாழ் பதமெலா நிலைகெட வருநாள் உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல். [2] |
விளக்கம் ---202
இந்திரன் முதலிய வானவர்கள் வாழும் உலகமும் ,தாமரை மலரில் உறையும் படைக்கும் தொழிலைச்செய்யும் பிரம்மனின் பரந்த உலகமும் ,சக்கரப்படையை உடைய பகவான் வரங்களை அளித்து இந்த உலகத்தை காத்தவாறு வாழ்கின்ற பரமபதம் ---
ஆகிய எல்லா உலகமும் அழிகின்ற நாள் வந்து அழிந்தபோதும் --
நிலையாக நின்று --ஊழிக்காலத்தையும் கடந்து நிற்கும் ---இந்தத் திருக்கயிலாயம் .
** **************************************************************************
பாடல் --203
அரம்பை மாதரா ராடலி னரவமும் பாடல்
நரம்பி னாசையு முழவதிர் சும்மையும் நால்வாய்
வரம்பி லாதையு மருவிவீ ழொலியுமா றாது
நிரம்பி வானமுந் திசைகளு நிமிர்வன மாதோ. [3]
நரம்பி னாசையு முழவதிர் சும்மையும் நால்வாய்
வரம்பி லாதையு மருவிவீ ழொலியுமா றாது
நிரம்பி வானமுந் திசைகளு நிமிர்வன மாதோ. [3]
விளக்கம் ---203
தேவமகளிர் நடனமாடும் ஒலியும் ,பாடலின் ஒலியும் ,நரம்புவாத்தியங்களின் இசையின் ஒலியும் , முழவு வாத்தியத்தின் முழக்கத்தின் ஒலியும் ,யானையின் அளவில்லாத பிளிறல் ஒலியும் ,அருவி விழுகின்ற ஒலியும் ---கலந்து, எந்நேரமும் அங்கு நிரம்பி காணப்பட்டும் --மேலும் வானமும் எல்லாத்திசைகளிலும் பரவி நிரம்புகின்றது பாருங்கள் .
*************************************************************************
பாடல் --204
வெந்த நீற்றொளி வெண்மையும் விமலனை யகங்கொண்
டந்த மின்றியே யசைவற விருக்கையு மருவி
வந்த கண்களும் கொண்டவ ணிருக்குமா தவர்க்குத் தந்த தாலரன் கயிலையுந் தனதுசா ரூபம். [4]
விளக்கம் ---204
தீயினில் வெந்த 'திருநீற்றை ' ,பூசியதால் வெண்மையான உடலுடனும் ,அகத்தில்'விமலனை [சிவபெருமானை ]' நிலையாகக்கொண்டு ,அசைவில்லாமல் ஓரிடத்தில் இருந்து ,இறைவனின் மீதுண்டான பக்தியாலும் அன்பினாலும் கண்களில் அருவிபோல் நீர்வழிய --சிறந்த தவமிருக்கும் பூமிவாழ் மனிதருக்கு --சாரூபத்தை 'அரன் ' ஆகிய சிவபெருமான் தருவது போல --அவர் வாழும் திருக்கயிலாயமும் தரும் .
***************************************************************************
பாடல் --205
ஆங்கு வெண்டுகில் விரித்தெனக் கல்லென வார்த்து
வீங்கு காலரு வித்திரள் வெள்ளமே யன்றி
ஓங்கு நான்மறைக் குடுமியி னுள்ளொளி நோக்கித்
தூங்கு மாதவர் கண்களுஞ் சொரிவன வெள்ளம். [5]
விளக்கம் ---205
அங்கு [திருக்கைலாய த்தில் ]--வெண்மையான துணியை விரித்தது போன்று --கல்லென்ற ஒலியுடன் ஒழுங்காக ஓரிடத்தில் பொங்கி விழுகின்ற அருவிக்கூட்டத்தின் வெள்ளம் மட்டுமல்ல --
சிறப்புமிக்க நான்குமறைகளின் முடிந்த முடிவான அர்த்தத்தின் உள்ளே ஒளிரும் ஒளியான இறைவனை கண்டு --அதிலேயே மூழ்கிக்கிடக்கும் சிறந்த தவசீலரின் --கண்களில் இருந்தும் பொழிகின்ற கண்ணீரும் வெள்ளம்போல காட்சி தருகின்றது .
************************************************************************
பாடல் --206
கோட்டு மாமலர் நிலமலர் குண்டுநீ ரெடுத்துக்
காட்டு மாமலர் கொடிமலர் கொண்டுமுட் கரைந்த
பாட்டு மாமலர் கொண்டுநம் பரஞ்சுட ரடியிற்
சூட்டு மாதவர் தொகுதியுஞ் சூழ்வன வோருபால். [6]
விளக்கம் ---206
மரங்களில்[கோட்டுப்பூ ] மலரும் சிறப்பு மிக்க மலர் ,செடியில் பூக்கும் -நிலமலர் ,பெருத்த நீர்ப்பரப்பில் எடுப்பாக தெரியும் சிறந்த மலர் ,கொடிமலர் --ஆகியவைகளை கொணர்ந்து --மேலும் உள்ளம் பக்திஅன்பினால் கரைந்ததனால் எழுந்த பாடல்களாகிய சிறந்த மலர்களைக்கொண்டும் ---நம்முடைய 'பரஞ்சோதி சுடரின் 'அடியில் சூட்டுகின்ற சிறந்த தவத்தை உடைய மக்கள் கூட்டம் --
அங்கு ஒரு பக்கத்தில் சூழ்ந்து காணப்படுகின்றது .
*************************************************************************
பாடல் --207
விளக்கம் ---207
*************************************************************************
பாடல் --204
வெந்த நீற்றொளி வெண்மையும் விமலனை யகங்கொண்
டந்த மின்றியே யசைவற விருக்கையு மருவி
வந்த கண்களும் கொண்டவ ணிருக்குமா தவர்க்குத் தந்த தாலரன் கயிலையுந் தனதுசா ரூபம். [4]
விளக்கம் ---204
தீயினில் வெந்த 'திருநீற்றை ' ,பூசியதால் வெண்மையான உடலுடனும் ,அகத்தில்'விமலனை [சிவபெருமானை ]' நிலையாகக்கொண்டு ,அசைவில்லாமல் ஓரிடத்தில் இருந்து ,இறைவனின் மீதுண்டான பக்தியாலும் அன்பினாலும் கண்களில் அருவிபோல் நீர்வழிய --சிறந்த தவமிருக்கும் பூமிவாழ் மனிதருக்கு --சாரூபத்தை 'அரன் ' ஆகிய சிவபெருமான் தருவது போல --அவர் வாழும் திருக்கயிலாயமும் தரும் .
***************************************************************************
பாடல் --205
ஆங்கு வெண்டுகில் விரித்தெனக் கல்லென வார்த்து
வீங்கு காலரு வித்திரள் வெள்ளமே யன்றி
ஓங்கு நான்மறைக் குடுமியி னுள்ளொளி நோக்கித்
தூங்கு மாதவர் கண்களுஞ் சொரிவன வெள்ளம். [5]
விளக்கம் ---205
அங்கு [திருக்கைலாய த்தில் ]--வெண்மையான துணியை விரித்தது போன்று --கல்லென்ற ஒலியுடன் ஒழுங்காக ஓரிடத்தில் பொங்கி விழுகின்ற அருவிக்கூட்டத்தின் வெள்ளம் மட்டுமல்ல --
சிறப்புமிக்க நான்குமறைகளின் முடிந்த முடிவான அர்த்தத்தின் உள்ளே ஒளிரும் ஒளியான இறைவனை கண்டு --அதிலேயே மூழ்கிக்கிடக்கும் சிறந்த தவசீலரின் --கண்களில் இருந்தும் பொழிகின்ற கண்ணீரும் வெள்ளம்போல காட்சி தருகின்றது .
************************************************************************
பாடல் --206
கோட்டு மாமலர் நிலமலர் குண்டுநீ ரெடுத்துக்
காட்டு மாமலர் கொடிமலர் கொண்டுமுட் கரைந்த
பாட்டு மாமலர் கொண்டுநம் பரஞ்சுட ரடியிற்
சூட்டு மாதவர் தொகுதியுஞ் சூழ்வன வோருபால். [6]
விளக்கம் ---206
மரங்களில்[கோட்டுப்பூ ] மலரும் சிறப்பு மிக்க மலர் ,செடியில் பூக்கும் -நிலமலர் ,பெருத்த நீர்ப்பரப்பில் எடுப்பாக தெரியும் சிறந்த மலர் ,கொடிமலர் --ஆகியவைகளை கொணர்ந்து --மேலும் உள்ளம் பக்திஅன்பினால் கரைந்ததனால் எழுந்த பாடல்களாகிய சிறந்த மலர்களைக்கொண்டும் ---நம்முடைய 'பரஞ்சோதி சுடரின் 'அடியில் சூட்டுகின்ற சிறந்த தவத்தை உடைய மக்கள் கூட்டம் --
அங்கு ஒரு பக்கத்தில் சூழ்ந்து காணப்படுகின்றது .
*************************************************************************
பாடல் --207
கைய நாகமுங் காய்சின வுழுவையுங் கடுவாய்ப் பைய நாகமுந் தங்கிளை பரவிய முக்கண் ஐய னாகமெய் யருந்தவர் தமையடைந் தன்பு செய்ய நாகமும் வையமும் புகழ்வதச் சிலம்பு. [7] |
துதிக்கையை உடைய யானையும் ,மிகுந்த சினத்தை உடைய புலியும் ,நஞ்சுமிகுந்தவாயையும் படத்தையும் கொண்ட நாகமும் --தங்களை அணிந்த முக்கண்ணையுடைய ஐயனைப்போல கருதி ---
உண்மையான அருந்தவம் உடையவர்களின் அருகில்சென்று அன்புடன் இருப்பதை பார்த்து --
விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் வியந்து புகழ்கின்ற பெருமைமிக்கது அந்த 'திருக்கைலாயம் '.
*********************************************************************************
திருக்கைலாயச் சிறப்பு முற்றிற்று
பொருள்எழுதியவர்
DR.S.வீரம்மா தேவி .MBBS