திருவிளையாடல் புராணம்
ஓம் நமசிவாய
பாயிரம்
காப்பு
பாடல் --1
சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதிசெயச்
சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே.----[1]
முத்தி யான முதலைத் துதிசெயச்
சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே.----[1]
விளக்கம் --1
சக்தியாகவும் சிவமாகவும் முக்தியை தந்தருளவல்ல அந்த முக்தியாகவும் உள்ள ___ இரண்டு என்பது இல்லாத __ ஒன்றேயான பரம்பொருளான {எங்கும் நிறைந்துள்ள பொருள் } __ முதற் பொருளை வணங்கி புகழ்ந்து பாட
நல்ல சிறந்த பொருளை தரும் திருத்தமான சொற்களை தந்தருளும்படி ,அறிவுத்தெளிவை தந்தருளவல்ல சித்திவிநாயகப் பெருமானின் பொன்போன்ற பாதங்களை வணங்கி வேண்டுகின்றேன் -
******************************************************************************************************************************************************************
சொக்கலிங்க மூர்த்தி காப்பு
பாடல் --2
பாடல் --2
வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுண ருள்ளந் தோறுஞ்
சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி யேற்றுக்
குன்றுளே யிருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி
மன்றுளே மாறி யாடு மறைச்சிலம் படிகள் போற்றி. [2]
விளக்கம் --2
சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி யேற்றுக்
குன்றுளே யிருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி
மன்றுளே மாறி யாடு மறைச்சிலம் படிகள் போற்றி. [2]
விளக்கம் --2
ஐந்து புலன்களையும் அடக்கி ,அதை ஆட்டிவைக்கும் மனத்தையும் அடக்கி வெற்றி பெற்று ,,உண்மைப்பொருளை உணர்ந்தவர்களின் உள்ளத்தினுள் சென்று ,,அமர்ந்து ,,அங்கேயே தங்கி ,,அங்கு அமுதமாகிய ஆனந்தத்தை ஊற்றுபோல் பெருகச்செய்யும் உன் திருவருளை வணங்கி போற்றுகின்றேன்.
வெண்மையான பனிச்சிகரமான இமயமலை போல் விளங்கும் ரிஷபவாகனத்தின் மீது அமர்ந்து காட்சி தந்தருளும் உன் திருக்கோலத்தை வணங்கி போற்றுகின்றேன் .
வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய உன் திருக்கோலத்தில் ,நான்கு வேதங்களும் சிலம்பமாகி ஒலித்துக்கொண்டிருக்கும் உன் திருவடிகளை வணங்கி போற்றுகின்றேன்
குறிப்பு ;--போற்றி போற்றி என்றால் மிக்க கவனத்துடனும் பணிவுடனும் பக்தியுடனும் பாதுகாத்து வைத்து வணங்குகின்றேன் --என்று அர்த்தம்
******************************************************************************************************************************************************************
அங்கயற்கண்ணம்மை காப்பு
பாடல் --3
பாடல் --3
சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி
யுத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்குப்
பால்சுரந்த கலசம் போற்றி
இரும்புமனங் குழைத்தென்னை யெடுத்தாண்ட
வங்கயற்க ணெம்பி ராட்டி
அரும்புமின நகைபோற்றி யாரணநூ
புரஞ்சிலம்பு மடிகள் போற்றி. [3]
விளக்கம் ---3
யுத்தரியத் தொடித்தோள் போற்றி
கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்குப்
பால்சுரந்த கலசம் போற்றி
இரும்புமனங் குழைத்தென்னை யெடுத்தாண்ட
வங்கயற்க ணெம்பி ராட்டி
அரும்புமின நகைபோற்றி யாரணநூ
புரஞ்சிலம்பு மடிகள் போற்றி. [3]
விளக்கம் ---3
வண்டுகள் ரீங்காரமிடும் மணம் மிக்க பூக்களை சூடியுள்ள கூந்தல் போற்றி --
உத்தரீயத்தையும் வளையல்களையும் அணிந்துள்ள திருத்தோள் போற்றி --
விற்களை போன்ற கரிய புருவங்கள் போற்றி ---
திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் சுரந்தருளிய கலசம் போற்றி--
பல பிறவிகளின் கர்ம வினைகளால் தடிப்பேறி கடின இரும்புபோல் இருந்த என் மனதை,,, தீயினால் இரும்பு இளகுவதுபோல் தன் கருணை பார்வையினால் கர்மவினைகள் இளகி ஓடச்செய்து ----__ பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுவித்த --அழகிய மீன் போன்ற கண்களை உடைய என் அன்னையின் ,,,மலரத்துடிக்கும் பூவின் மொட்டு போல அரும்பும் புன்முறுவல் போற்றி
வேதங்கள் கால் சிலம்பாக இருந்து ஓலித்துக்கொண்டிருக்கும் திருவடிகள் போற்றி ..
******************************************************************************************************************************************************************
நூற்பயன்
பாடல் --4
பாடல் --4
திங்கள் அணி திரு ஆலவாய் எம் அண்ணல் திரு
விளையாட்டு இவை அன்பு செய்து கேட்போர்
சங்க நிதி பதுமநிதிச் செல்வம் ஓங்கித் தகைமை தரு
மகப் பெறுவர் பகையை வெல்வர்
மங்கல நல் மணம் பெறுவர் பிணி வந்து எய்தார் வாழ்
நாளும் நனி பெறுவர் வான் நாடு எய்திப்
புங்கவர் ஆய் அங்கு உள்ள போக மூழ்கிப் புண்ணியர்
ஆய்ச் சிவன் அடிக்கீழ் நண்ணி வாழ்வர். [4]
விளக்கம் --4
விளையாட்டு இவை அன்பு செய்து கேட்போர்
சங்க நிதி பதுமநிதிச் செல்வம் ஓங்கித் தகைமை தரு
மகப் பெறுவர் பகையை வெல்வர்
மங்கல நல் மணம் பெறுவர் பிணி வந்து எய்தார் வாழ்
நாளும் நனி பெறுவர் வான் நாடு எய்திப்
புங்கவர் ஆய் அங்கு உள்ள போக மூழ்கிப் புண்ணியர்
ஆய்ச் சிவன் அடிக்கீழ் நண்ணி வாழ்வர். [4]
விளக்கம் --4
சந்திரனை திருமுடிமீது அணிந்து, திருவாலவாய் எனப்படும் மதுரையில் எழுந்தருளியுள்ள-- என்னுடைய இறைவனான சிவபெருமான் புரிந்தருளிய திருவிளையாடல்களை --
இறைவன் மீது அன்பு நிறைந்த மனத்தை செலுத்தி கேட்போர் ---
செல்வத்தின் அதிபதியாகிய குபேரனிடம் உள்ள அழியாத செல்வமாகிய --சங்கநிதி ,பதுமநிதி என்ற இரண்டு செல்வ வளங்களையும் என்றும் குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்குமாறு பெற்று ,
,நல்ல குணங்களை கொண்ட குழந்தைசெல்வங்களையும் பெறுவார்கள் -
உட்பகை -வெளிப்பகை ___ ஆகிய அனைத்து பகைகளையும்
வெல்வார் கள் ---
மங்கலம் நிறைந்த திருமணவாழ்வை அடைவார்கள்---
பசி நோய்,உடல் நோய்,மன நோய்---பொன்ற எந்த நொயினாலும் பாதிக்கப் படமாட்டார்கள்.
நீண்ட வாழ்நாளை பெறுவார்கள் ---
இறந்தபின் தேவர்கள் வாழும் உலகுக்கு சென்று --தேவர்களாக வாழ்ந்து ---அங்குள்ள அனைத்து இன்பங்களையும் நன்கு அனுபவித்து ---அப்படி அனுபவிக்கும் போதும்-- சிவபெருமான் அருளால் அவர் திருவடிகளை மறவாத புண்ணியர்களாக வாழ்ந்து ---முடிவில்,, இறைவன் சிவபெருமானின் திருவடி நிழலான முக்தியை அடை வார்கள் . [4]
******************************************************************************************************************************************************************
வாழ்த்து
பாடல் --5
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர் கட்கு எல்லாம் நால் மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உலகம் எல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க. [ 5]
விளக்கம் --5
பாடல் --5
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்
பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம்
நல்குக உயிர் கட்கு எல்லாம் நால் மறைச் சைவம் ஓங்கிப்
புல்குக உலகம் எல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க. [ 5]
விளக்கம் --5
நான்கு வேதங்கள் ஓதும் ஒலியும் ,யாகங்கள் செய்வதால் ஏற்படும் ஒளியும் -ஒலியும் ---எங்கும் நிரம்பட்டும் ----
வானம் மழை நீரினை நன்கு பொழிந்து எல்லா வளங்களும் அனைத்து இடங்களிலும் பரவி பெருகட்டும் ----
அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் கிடைக்கட்டும் --
உலகின் எல்லா பகுதியிலும் நான்கு வேதங்களும் சைவ சமயமும்
நன்கு பரவி தழைத்து செழித்து வளர்ந்து நின்று நிலைபெறட்டும் ---
அரசனின் நீதி தவறாத ஆட்சி என்றென்றும் வாழட்டும் .
******************************************************************************************************************************************************************
வானம் மழை நீரினை நன்கு பொழிந்து எல்லா வளங்களும் அனைத்து இடங்களிலும் பரவி பெருகட்டும் ----
அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் கிடைக்கட்டும் --
உலகின் எல்லா பகுதியிலும் நான்கு வேதங்களும் சைவ சமயமும்
நன்கு பரவி தழைத்து செழித்து வளர்ந்து நின்று நிலைபெறட்டும் ---
அரசனின் நீதி தவறாத ஆட்சி என்றென்றும் வாழட்டும் .
******************************************************************************************************************************************************************
பாயிரம் முற்றும்
பொருள்எழுதியவர்
DR.S.வீரம்மா தேவி .MBBS