Meenatchi amman Temple----Madurai |
திருவிளையாடல் புராணம்
ஓம் நமசிவாய
மதுரைக் காண்டம்
திருநகரச் சிறப்பு --பகுதி 3
பாடல் --112
விளக்கம் --112
சண்ட பானுவுந் திங்களுந் தடைபடத் திசையும் அண்ட கோளமும் பரந்துநீண் டகன்றகோ புரங்கள் விண்ட வாயிலால் வழங்குவ விடவரா வங்காந் துண்ட போல்பவு முமிழ்வ போல்பவு முழலா. [21] |
விளக்கம் --112
வேகமாகச்செல்லும் சூரியனுடைய பாதையும் ,சந்திரனுடைய பாதையும் தடைபடும்படியும்----
எல்லாத்திசைகளிலும் அண்டகோளங்களையும் எட்டும்படி பரந்து நீண்டு உயர்ந்து விளங்குகின்றன கோட்டை கோபுரங்கள் ---
அதன் திறந்த வாயில் வழியாக -சூரியனும் சந்திரனும் ---
விஷம் கொண்ட நாகங்களான 'ராகு கேது 'க்களால் --விழுங்கி பின் உமிழப்பட்டது போல --மறைந்தும் பின் வெளிவந்தும் --காட்சியளிக்கின்றன .
*********************************************--------------------21
பாடல் --113
மகர வேலையென் றியானைபோன் மழையருந் தகழிச்
சிகர மாலை*சூ ழம்மதி றிரைக்கரந் துழாவி
அகழ வோங்குநிர் வையையா லல்லது வேற்றுப்
பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே. [22]
விளக்கம் --113
மகர வேலையென் றியானைபோன் மழையருந் தகழிச்
சிகர மாலை*சூ ழம்மதி றிரைக்கரந் துழாவி
அகழ வோங்குநிர் வையையா லல்லது வேற்றுப்
பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே. [22]
விளக்கம் --113
சுறாமீன்களை உடைய கடல் என்று கருதிய 'யானையைப்போன்ற 'பெரிய மேகங்கள் அதனிடம் நீரைப்பருக நெருங்குகின்றன --அந்த அளவுக்கு சிறப்பும் அளவில் பெரியதுமான அகழியால் சூழப்பெற்று----
பெரிய குன்றுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து செய்யப்பட் ட மாலை போன்று விளங்குகின்றது கோட்டை மதில் --
அலைகள் என்ற தன்னுடைய கைகளை நீட்டி துளைப்பதுபோல் அக்கோட்டை சுவரின்மீது மோதும் , பெருத்த நீர்ப்பரப்பை உடைய ' வைகை ' நதி யால் மட்டுமே அந்த கோட்டை மதிலை தாக்க முடியும் ----
வேறு பகைவர் படைகளால் அப்படி அந்த கோட்டை மதிலை தாக்க முடியாவேமுடியாது .
அவ்வளவு பலமும் சிறப்பும் மிக்கது அந்த கோட்டை மதில் சுவர் .
*****************************************************-----------------------22
பாடல் --114
எல்லை தேர்வழித் தடைசெயு மிம்மமிற் புறஞ்சூழ்ந்
தொல்லை மேவலர் வளைந்துழி யுடன்றுபோ ராற்றி
வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளே வெல்ல
வல்ல வம்மதிற் பொறிசெயு மறஞ்சிறி துரைப்பாம். [23]
விளக்கம் --114
சூரியனின் தேர் செல்லும் பாதையை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து விளங்கும் கோட்டை மதிலை சூழ்ந்து வந்து தொல்லை கொடுக்கும் பகைவர்களை வளைத்து மிக்க சினத்துடன் அவர்களை அழிக்க --மல்லர்களான போர்வீரர்களும் வேண்டுமா ?---
பொறிகளே அப்பகைவர்களை வெல்வதற்கு போதும் --என்ற அளவுக்கு அம்மதிலின் மேலிருந்து பொழியப்படும் செயலின் சிறப்பைப்பற்றி இனி கூறலாம் .
***************************************************----------------------23
பாடல் --115
மழுக்கள் வீசுவன நஞ்சு பூசுமுனை வாள்கள் வீசுவன முத்தலைக்
கழுக்கள் வீசுவன குந்த நேமியெரி கால வீசுவன காலனேர்
எழுக்கள் வீசுவன கப்ப ணங்கள்விட மென்ன வீசுவன வன்னெடுங்
கொழுக்கள் வீசுவனகற்க வண்கயிறு கோத்து வீசுவன வார்த்தரோ. [24]
விளக்கம் ---115
'மழு 'என்னும் ஆயுதத்தை எறியும் பொறிகள் ----
விஷம் தடவிய முனையை உடைய வாட்களை எறியும் பொறிகள் ---
மூன்று தலைகளை உடைய சூலாயுதத்தை எறியும் பொறிகள் ---
'கைவேல் திகிரி' என்னும் ஆயுதத்தை 'தீஉமிழ 'எறியும் பொறிகள் ---
கூற்றுவனை [எமனை ]போன்ற தடிகளை எறியும் பொறிகள் ---
இரும்பாலான நெருஞ்சி முள் வடிவமுடைய ஆயுதங்களை ,விஷம் போல
எறியும் பொறிகள் ---
வலிய நெடிய 'கொழுப்படைகள் 'எறியும் பொறிகள் ---
கற்களை கயிற்றில் கோர்த்து எறியும் பொறிகள் ---
என எண்ணற்ற பொறிகள் ஆரவாரமுடன் அணிவகுத்து உள்ளன .
***************************************************---------------------------24
பாடல் --116
விளக்கம் --116
விஷத்தை கக்குகின்ற துளையை உடைய கூர்மையான பற்களை உடைய பாம்புப்பொறிகள் நாவினை நீட்டி பகைவர்களை கொல்லும் ----
மலைப்பாம்பு போன்ற பொறிகள் மிக்க கோபத்துடன் தன்னுடைய குகை போன்ற வாயைத்திறந்து பகைவர்களை ,பயத்தினால் திகைக்கவைத்து விழுங்கிவிடும் ---
யானைப்பொறிகள் கொடிய உலக்கையை வீசி எதிரே நெருங்குபவர்களின் தலைகளை சிதறடிக்கும் --
மிக்க பயத்தை அளிக்கும் கொடுமையான பொறி --புவிஈர்ப்பு விசையை விட வேகத்துடன் அருகில் வந்து அமுக்கி விடும் 'புலிப்பொறி ' ஆகும் .
******************************************************---------------------------25
பாடல் --117
எள்ளி யேறுநரை யிவுளி மார்பிற் வெறிந்து குண்டகழி யிடைவிழத்
தள்ளி மீளுமுருள் கல்லி ருப்புமுனை தந்து வீசியுடல் சிந்துமாற்
கொள்ளி வாயலகை வாய்தி றந்துகனல் கொப்பு ளிப்பவுடல் குப்புறத்
துள்ளி யாடுவன கைகள் கொட்டுவன தோள்பு டைப்ப சில கூளியே. [26]
விளக்கம் --117
மதிலை இளக்காரமாக எண்ணி ஏறுபவர்களை ,குதிரைப்பொறியானது '--அவர்களின் மார்பு உடையும்படி உதைத்து ---அகழிக்குள் தள்ளி --மீண்டும் தன்னுடைய இடத்துக்கே வந்துவிடும் ---
உருளைப்போல இருக்கும் 'கல்லிருப்பு பொறி 'யானது முள்போன்ற ஆயுதத்தை எறிந்து பகைவர்களின் உடலில் இரத்தத்தை சிந்த வைக்கும் ---
கொள்ளிவாய்ப்பேய் பொறிகள் தங்கள் வாயைத்திறந்து தீயைக்கக்கி பகைவர்களின் உடலை குப்புறத்தள்ளி ஆடும் --
கைகளை தட்டி பகைவர்களின் தோளில் நன்றாக அடித்து வீழ்த்தும் சில பேய்ப்பொறிகள் -.
******************************************************--------------------26
பாடல் --118
விளக்கம் --118
பகைவர்கள் நெருங்கிவரும்போது ----
சில பொறிகள் --
கட்டுகின்ற சங்கிலியை எறிந்து இழுக்கும் ---அந்த சங்கிலியை பிடித்த கைகளை கூர்மையான ஆயுதத்தை கொண்டு அறுத்து மகிழும் ----
பகைவர்களின் தலையை திருகி உடலை நெரிக்கும் ----
மரநிலைகளினால்பிளவுபட்ட நாக்கினை உடைய தீயினை கொளுத்தி எறியும் ---
பெரியகற்களை எதிரிகளின் மீது உருட்டித்தள்ளி கொல்லும் --
'ஒல்லென்ற ' ஒலியுடன் கல்மழையைப்பெய்யும் ---
சுட்டமணலைக் கொட்டும் .
****************************************************------------------27
பாடல் --119
விளக்கம் ---119
சில பொறிகள் --
உருக்கிய ஈயத்தை மழைபோல கொட்டும் ----
இரும்பினால் செய்யப்பட வட்டுகளை கொண்ட உருக்கப்பட்ட 'செம்புகுழம்பை 'ஆறுபோல பெருகி ஓடும்படி வீசும் ---
பகைவர்கள் எரியும் ஆயுதங்களை எல்லாம் எதிரே சென்று பிடித்து --அதை விட்டவர்கள் தெறித்து ஓட மிக்க செருக்குடன் வீசும் ---
சஞ்சரிக்கின்ற மாடங்களுடன் எல்லா இடங்களுக்கும் சென்று சென்று உடுக்கை ஒலியை பேரொலியாக எழுப்பி திரும்பிவரும் ----
நடைத்தேரை மேலேசெலுத்தி அம்புமழையை --மழைபோல பெய்யும் .
************************************************------------------------28
பாடல் --120
வெறிகொ ளைம்பொறியை வெல்லினும் பொருது வெல்லு தற்கரிய காலனை
முறிய வெல்லினும் வெலற்கருங் கொடிய முரணவா யமர ரரணெலாம்
அறிவி னானிறுவு கம்மி யன்செயவு மரியவா யவனர் புரியுமிப்
பொறிகள் செய்யும்வினை யின்ன பொன்னணி புரத்து வீதிக ளுரைத்துமால்.[29]
விளக்கம் --120
நம்மை வெறிகொள்ளச்செய்யும் --நம்முடைய 'ஐந்து பொறிகளை' --நாம் வென்றாலும் --
போர்செய்து வெற்றிகொள்ள முடியாத 'மரணதேவனை 'புறமுதுகிட்டு ஓடவிரட்டி வென்றாலும் ---
வெல்வதற்கு முடியாத கொடிய வலிமைவாய்ந்த --தேவர்களின் அரண்களை ---நினைத்த உடன் --எண்ணத்தினாலேயே கட்டிமுடிக்க வல்ல --'தேவதைச்சாலேயே 'செய்யமுடியாது ---
'யவனர்களால் 'செய்யப்பட்ட ---அரிய செயல்களை செய்யும் --இந்த வியத்தகு பொறிகளை.
இனி பொன்போல மிளிரும் மாளிகைகள் வரிசையாய் அழகுற அமைக்கப்பட்டு விளங்கும் 'மதுரை மாநகரின் ' வீதிகளைப்பற்றி கூறலாம் .
******************************************************************----------29
பெரிய குன்றுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து செய்யப்பட் ட மாலை போன்று விளங்குகின்றது கோட்டை மதில் --
அலைகள் என்ற தன்னுடைய கைகளை நீட்டி துளைப்பதுபோல் அக்கோட்டை சுவரின்மீது மோதும் , பெருத்த நீர்ப்பரப்பை உடைய ' வைகை ' நதி யால் மட்டுமே அந்த கோட்டை மதிலை தாக்க முடியும் ----
வேறு பகைவர் படைகளால் அப்படி அந்த கோட்டை மதிலை தாக்க முடியாவேமுடியாது .
அவ்வளவு பலமும் சிறப்பும் மிக்கது அந்த கோட்டை மதில் சுவர் .
*****************************************************-----------------------22
பாடல் --114
எல்லை தேர்வழித் தடைசெயு மிம்மமிற் புறஞ்சூழ்ந்
தொல்லை மேவலர் வளைந்துழி யுடன்றுபோ ராற்றி
வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளே வெல்ல
வல்ல வம்மதிற் பொறிசெயு மறஞ்சிறி துரைப்பாம். [23]
விளக்கம் --114
சூரியனின் தேர் செல்லும் பாதையை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து விளங்கும் கோட்டை மதிலை சூழ்ந்து வந்து தொல்லை கொடுக்கும் பகைவர்களை வளைத்து மிக்க சினத்துடன் அவர்களை அழிக்க --மல்லர்களான போர்வீரர்களும் வேண்டுமா ?---
பொறிகளே அப்பகைவர்களை வெல்வதற்கு போதும் --என்ற அளவுக்கு அம்மதிலின் மேலிருந்து பொழியப்படும் செயலின் சிறப்பைப்பற்றி இனி கூறலாம் .
***************************************************----------------------23
பாடல் --115
மழுக்கள் வீசுவன நஞ்சு பூசுமுனை வாள்கள் வீசுவன முத்தலைக்
கழுக்கள் வீசுவன குந்த நேமியெரி கால வீசுவன காலனேர்
எழுக்கள் வீசுவன கப்ப ணங்கள்விட மென்ன வீசுவன வன்னெடுங்
கொழுக்கள் வீசுவனகற்க வண்கயிறு கோத்து வீசுவன வார்த்தரோ. [24]
விளக்கம் ---115
'மழு 'என்னும் ஆயுதத்தை எறியும் பொறிகள் ----
விஷம் தடவிய முனையை உடைய வாட்களை எறியும் பொறிகள் ---
மூன்று தலைகளை உடைய சூலாயுதத்தை எறியும் பொறிகள் ---
'கைவேல் திகிரி' என்னும் ஆயுதத்தை 'தீஉமிழ 'எறியும் பொறிகள் ---
கூற்றுவனை [எமனை ]போன்ற தடிகளை எறியும் பொறிகள் ---
இரும்பாலான நெருஞ்சி முள் வடிவமுடைய ஆயுதங்களை ,விஷம் போல
எறியும் பொறிகள் ---
வலிய நெடிய 'கொழுப்படைகள் 'எறியும் பொறிகள் ---
கற்களை கயிற்றில் கோர்த்து எறியும் பொறிகள் ---
என எண்ணற்ற பொறிகள் ஆரவாரமுடன் அணிவகுத்து உள்ளன .
***************************************************---------------------------24
பாடல் --116
நஞ்சு பில்குதுளை வாளெ யிற்றரவு நாநிமிர்த் தெறியு மலையரா வெஞ்சி னங்கொண்முழை வாய்தி றந்துபொரு விக்கிட விழுங்குமால் |
குஞ்ச ரங்கொடிய முசலம் வீசியெதிர் குறுகு வார்தலைகள் சிதறுமால் அஞ்சு வெம்பொறி விசைப்பி னுங்கடுகி யடுபு லிப்பொறி யமுக்குமால். [25] |
விளக்கம் --116
விஷத்தை கக்குகின்ற துளையை உடைய கூர்மையான பற்களை உடைய பாம்புப்பொறிகள் நாவினை நீட்டி பகைவர்களை கொல்லும் ----
மலைப்பாம்பு போன்ற பொறிகள் மிக்க கோபத்துடன் தன்னுடைய குகை போன்ற வாயைத்திறந்து பகைவர்களை ,பயத்தினால் திகைக்கவைத்து விழுங்கிவிடும் ---
யானைப்பொறிகள் கொடிய உலக்கையை வீசி எதிரே நெருங்குபவர்களின் தலைகளை சிதறடிக்கும் --
மிக்க பயத்தை அளிக்கும் கொடுமையான பொறி --புவிஈர்ப்பு விசையை விட வேகத்துடன் அருகில் வந்து அமுக்கி விடும் 'புலிப்பொறி ' ஆகும் .
******************************************************---------------------------25
பாடல் --117
எள்ளி யேறுநரை யிவுளி மார்பிற் வெறிந்து குண்டகழி யிடைவிழத்
தள்ளி மீளுமுருள் கல்லி ருப்புமுனை தந்து வீசியுடல் சிந்துமாற்
கொள்ளி வாயலகை வாய்தி றந்துகனல் கொப்பு ளிப்பவுடல் குப்புறத்
துள்ளி யாடுவன கைகள் கொட்டுவன தோள்பு டைப்ப சில கூளியே. [26]
விளக்கம் --117
மதிலை இளக்காரமாக எண்ணி ஏறுபவர்களை ,குதிரைப்பொறியானது '--அவர்களின் மார்பு உடையும்படி உதைத்து ---அகழிக்குள் தள்ளி --மீண்டும் தன்னுடைய இடத்துக்கே வந்துவிடும் ---
உருளைப்போல இருக்கும் 'கல்லிருப்பு பொறி 'யானது முள்போன்ற ஆயுதத்தை எறிந்து பகைவர்களின் உடலில் இரத்தத்தை சிந்த வைக்கும் ---
கொள்ளிவாய்ப்பேய் பொறிகள் தங்கள் வாயைத்திறந்து தீயைக்கக்கி பகைவர்களின் உடலை குப்புறத்தள்ளி ஆடும் --
கைகளை தட்டி பகைவர்களின் தோளில் நன்றாக அடித்து வீழ்த்தும் சில பேய்ப்பொறிகள் -.
******************************************************--------------------26
பாடல் --118
துவக்கு சங்கிலி யெறிந்தி ழுக்குமரி தொடர்பி டித்தகை யறுக்கவிட் டுவக்கு மொன்னலர்க டலைக ளிதை்திருகி யுடனே ருக்குமர நிலைகளாற் கவைக்கொ ழுந்தழல் கொளுத்தி வீசுமெதிர்கல்லு ருட்டியடு மொல்லெனக் குவைக்க டுங்கன்மழை பெய்யு மட்டமணல் கொட்டு மேவலர்கள் கிட்டவே. [27] |
விளக்கம் --118
பகைவர்கள் நெருங்கிவரும்போது ----
சில பொறிகள் --
கட்டுகின்ற சங்கிலியை எறிந்து இழுக்கும் ---அந்த சங்கிலியை பிடித்த கைகளை கூர்மையான ஆயுதத்தை கொண்டு அறுத்து மகிழும் ----
பகைவர்களின் தலையை திருகி உடலை நெரிக்கும் ----
மரநிலைகளினால்பிளவுபட்ட நாக்கினை உடைய தீயினை கொளுத்தி எறியும் ---
பெரியகற்களை எதிரிகளின் மீது உருட்டித்தள்ளி கொல்லும் --
'ஒல்லென்ற ' ஒலியுடன் கல்மழையைப்பெய்யும் ---
சுட்டமணலைக் கொட்டும் .
****************************************************------------------27
பாடல் --119
உருக்கி யீயமழை பெய்யு மாலய வுருக்கு வட்டுகுரு செம்பினீர் பெருக்கி வீசும்விடு படையெ லாமெதிர்பிடித்து விட்டவர் தமைத்தெறச் செருக்கி வீசுநடை கற்ற மாடமொடு சென்று சென்றுதுடி முரசொடும் பெருக்கி மீளுநடை வைய மேனடவி யெய்யும் வாளிமழை பெய்யுமால். [28] |
சில பொறிகள் --
உருக்கிய ஈயத்தை மழைபோல கொட்டும் ----
இரும்பினால் செய்யப்பட வட்டுகளை கொண்ட உருக்கப்பட்ட 'செம்புகுழம்பை 'ஆறுபோல பெருகி ஓடும்படி வீசும் ---
பகைவர்கள் எரியும் ஆயுதங்களை எல்லாம் எதிரே சென்று பிடித்து --அதை விட்டவர்கள் தெறித்து ஓட மிக்க செருக்குடன் வீசும் ---
சஞ்சரிக்கின்ற மாடங்களுடன் எல்லா இடங்களுக்கும் சென்று சென்று உடுக்கை ஒலியை பேரொலியாக எழுப்பி திரும்பிவரும் ----
நடைத்தேரை மேலேசெலுத்தி அம்புமழையை --மழைபோல பெய்யும் .
************************************************------------------------28
பாடல் --120
வெறிகொ ளைம்பொறியை வெல்லினும் பொருது வெல்லு தற்கரிய காலனை
முறிய வெல்லினும் வெலற்கருங் கொடிய முரணவா யமர ரரணெலாம்
அறிவி னானிறுவு கம்மி யன்செயவு மரியவா யவனர் புரியுமிப்
பொறிகள் செய்யும்வினை யின்ன பொன்னணி புரத்து வீதிக ளுரைத்துமால்.[29]
விளக்கம் --120
நம்மை வெறிகொள்ளச்செய்யும் --நம்முடைய 'ஐந்து பொறிகளை' --நாம் வென்றாலும் --
போர்செய்து வெற்றிகொள்ள முடியாத 'மரணதேவனை 'புறமுதுகிட்டு ஓடவிரட்டி வென்றாலும் ---
வெல்வதற்கு முடியாத கொடிய வலிமைவாய்ந்த --தேவர்களின் அரண்களை ---நினைத்த உடன் --எண்ணத்தினாலேயே கட்டிமுடிக்க வல்ல --'தேவதைச்சாலேயே 'செய்யமுடியாது ---
'யவனர்களால் 'செய்யப்பட்ட ---அரிய செயல்களை செய்யும் --இந்த வியத்தகு பொறிகளை.
இனி பொன்போல மிளிரும் மாளிகைகள் வரிசையாய் அழகுற அமைக்கப்பட்டு விளங்கும் 'மதுரை மாநகரின் ' வீதிகளைப்பற்றி கூறலாம் .
******************************************************************----------29
பொருள்எழுதியவர்
DR.S.வீரம்மா தேவி .MBBS