திருவிளையாடல் புராணம்
ஓம் நமசிவாய
மதுரைக் காண்டம்
தல விசேடப் படலம்
பகுதி --1
பாடல் 233
நாட்டம் ஒரு மூன்று உடைய நாயகனுக்கு அன்பு
உடையீர் நயந்து நீவிர்
கேட்ட தலம் ஈண்டு உரைத்த திருவால வாய்
அதனுள் கிளைத்துப் பொன்னம்
தோட்டலர் தாமரை முளைத்த தொரு தடமும் சுந்தரச்
செம் சோதி ஞான
ஈட்டம் என முளைத்த சிவலிங்கம் ஒன்று உள
இன்னும் இசைப்பக் கேண்மின்---------------------------1
விளக்கம் 233
பகுதி --1
பாடல் 233
நாட்டம் ஒரு மூன்று உடைய நாயகனுக்கு அன்பு
உடையீர் நயந்து நீவிர்
கேட்ட தலம் ஈண்டு உரைத்த திருவால வாய்
அதனுள் கிளைத்துப் பொன்னம்
தோட்டலர் தாமரை முளைத்த தொரு தடமும் சுந்தரச்
செம் சோதி ஞான
ஈட்டம் என முளைத்த சிவலிங்கம் ஒன்று உள
இன்னும் இசைப்பக் கேண்மின்---------------------------1
விளக்கம் 233
கண்கள் ஒரு மூன்று உடைய நாயகனிடம் {சிவபெருமானிடம் } அன்புடைய நீங்கள் ---விரும்பி கேட்ட இடம் ---இப்போது நான் கூறிய "திருஆலவாய் "---
அந்த இடத்தில் பொன்னைப்போல ஒளிரும் இதழ்களுடன் செழித்து வளர்ந்த தாமரை மலர்கள் நிறைந்திருந்த ஒரு குளமும் ---
""அழகான சிவந்த ஜோதியான" ஞான ஒளி" --யைப்போன்று --தானே முளைத்த "சிவலிங்கம் " ஒன்றும் உள்ளது --
இன்னும் -கேட்க இனிமையான இசையைப்போல் இருக்கும் --இதன் சரிதத்தை சொல்கிறேன் --தயை கூர்ந்து கேளுங்கள் .
*******************************************************************************
பாடல் 234
திருவால வாய்க்கு இணையா ஒருதலமும் தெய்வ
மணம் செய்ய பூத்த
மருவார் பொன் கமல நிகர் தீர்த்தமும் அத்
தீர்த்தத்தின் மருங்கின் ஞான
உருவாகி உறை சோம சுந்தரன் போல் இகபரம்
தந்து உலவா வீடு
தருவானும் முப்புவனத் தினும் இல்லை உண்மை
இது சாற்றின் மன்னோ.
மணம் செய்ய பூத்த
மருவார் பொன் கமல நிகர் தீர்த்தமும் அத்
தீர்த்தத்தின் மருங்கின் ஞான
உருவாகி உறை சோம சுந்தரன் போல் இகபரம்
தந்து உலவா வீடு
தருவானும் முப்புவனத் தினும் இல்லை உண்மை
இது சாற்றின் மன்னோ.
விளக்கம் 234
"திரு ஆலவாய்க்கு ' இணையான ஒரு திருத்தலமும் --
தெய்வமணம் நிறைந்து வீச பூத்து நிற்கும் பொன்னிறமான தாமரை மலர்கள் நிறைந்த குளமும் --
அந்த குளத்தின் அருகில் --ஒரு பக்கத்தில் --ஞானத்தின் உருவமாக வீற்றிருக்கும் "சோமசுந்தர பெருமான் "--போல --
இந்த உலகத்தின் சுகம் ,மேலுலகத்தின் சுகம் --ஆகியவற்றை தந்து --
மேலும் "மீண்டும் பிறவா தன்மையாகிய --முக்தியையும் "தருபவன் --
மூன்று உலகத்திலும் யாரும் இல்லை ---
இது உண்மை என்று ஆணித்தரமாக சொல்லுகின்றேன் --நம்புங்கள் .
******************************************************************************
பாடல் 235
அவ்வகைய மூன்றின் முதல் தலப் பெருமை தனைச்
சுருக்கி அறையக் கேண்மின்
எவ்வகைய உலகத்தும் தருமதலம் அதிகம் அவற்று
ஈறு இலாத
சைவ தலம் அதிகம் அவற்று அறுபத்து எட்டு அதிகம்
அவை தமில் ஈர் எட்டு
தெய்வ தலம் அதிகம் அவற்று அதிக தல நான்கு
அவற்றைச் செப்பக் கேண்மின்
விளக்கம் 235
அந்த மூன்றில் --முதலில் இடத்தின் பெருமையை சுருக்கமாக கூறுகின்றேன் --கேளுங்கள் --
பல வகைப்பட்ட இடங்களை உடைய இந்த உலகத்தில் --புண்ணிய தலங்கள் --உயர்ந்தவை --
அவற்றுள் ஈடுஇணையற்ற சைவத்தலங்கள் உயர்ந்தவை --
அந்த சைவத்தலங்களுக்குள் 68 உயர்ந்தவை ---
அவற்றுள் 16 தெய்வத்தலங்கள் உயர்ந்தவை --
அவற்றுள் அதிக சிறப்புவாய்ந்தவை 4 தலங்கள் ஆகும் --
அவற்றை கூறுகின்றேன் கேளுங்கள் --
பாடல் 236அந்த மூன்றில் --முதலில் இடத்தின் பெருமையை சுருக்கமாக கூறுகின்றேன் --கேளுங்கள் --
பல வகைப்பட்ட இடங்களை உடைய இந்த உலகத்தில் --புண்ணிய தலங்கள் --உயர்ந்தவை --
அவற்றுள் ஈடுஇணையற்ற சைவத்தலங்கள் உயர்ந்தவை --
அந்த சைவத்தலங்களுக்குள் 68 உயர்ந்தவை ---
அவற்றுள் 16 தெய்வத்தலங்கள் உயர்ந்தவை --
அவற்றுள் அதிக சிறப்புவாய்ந்தவை 4 தலங்கள் ஆகும் --
அவற்றை கூறுகின்றேன் கேளுங்கள் --
அன்னமலி வயல் புலியூர் காசி நகர் காளத்தி ஆல
வாயாம்
இன்ன வளம் பதினான்கில் திரு வால வாய் அதிகம்
எவ்வாறு என்னின்
மின்னவிர் அம்பலம் காணக் காசிநகர் வதிந்து இறக்க
வியன் காளத்திப்
பொன் நகரம் பத்தியினால் வழிபாடு செய அளிக்கும்
போகம் வீடு.
விளக்கம் 236
அன்னங்கள் நிறைந்த வயல்களை உடைய "சிதம்பரம் ","காசிநகரம் "'காளத்தி ""ஆலவாய் "--ஆகிய இவை நான்கும் தான் ஆகும் .
இந்த வளம்மிக்க திருத்தலங்களாகிய நான்கில் ---"திருஆலவாய் "தான் உயர்ந்தது ---
எப்படி என்றால் --
மின்னலைப்போல் ஒளிர்கின்ற அம்பலத்தையுடைய "சிதம்பரம் "காண்பதினாலேயும் ---
"காசிநகர் "அங்கு சென்று இறப்பதினாலேயும் --
"வியப்பிற்குரிய காளத்தி என்ற பொன்னகரம் "பக்தியுடன் வழிபடுவதினாலேயும் ---
இந்த உலகத்திற்குண்டான இன்பங்களையும் --மறு உலகத்தின் முக்தியையும் --அளிக்கும் .
*********************************************************************************
பாடல் 237
அறம் தழையும் திருவால வாய் கேட்டவுடன் போகம் அளிக்கும் ஈண்டு பிறந்து இறவாப் பேர் இன்பக் கதியளிக்கும் இது அன்றிப் பிறழாதெங்கும் நிறைந்தபரன் எத்தலமும் படைப்பான் இத்தலத்தை முதன் நிருமித்து இங்ஙன் உறைந்த தருளினான் அன்றி இன்னம் உளது இதன் பெருமை உரைப்பக் கேண்மின். |
விளக்கம் 237
அறங்கள் சிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் "திரு ஆலவாய் " --பெயரை கேட்டவுடன் எல்லா இன்பங்களையும் அளிக்கும் --
மேலும் "பிறந்து இறக்கும் " தன்மையிலிருந்து விடுவித்து "முக்தி "என்ற இன்பநிலையை கொடுக்கும் ---
இது மட்டுமல்லாமல் --சிறு இடத்தையும் விடாமல் ,எங்கும் நிறைந்துள்ள "பரம்பொருள் "---மற்ற இடங்களை படைக்கும்முன் --இந்த இடத்தை முதலில் படைத்து ,நிலைநிறுத்தி --இந்த இடத்தில் வந்து நிலையாக தங்கியிருந்து --தன் கருணையை அனைத்துயிர்களுக்கும் வழங்கிக்கொண்டிருக்கின்றான் ----
இதன் பெருமை இன்னும் உள்ளது --அதையும் சொல்லுகின்றேன் ,கேளுங்கள் .
********************************************************************************
மேலும் "பிறந்து இறக்கும் " தன்மையிலிருந்து விடுவித்து "முக்தி "என்ற இன்பநிலையை கொடுக்கும் ---
இது மட்டுமல்லாமல் --சிறு இடத்தையும் விடாமல் ,எங்கும் நிறைந்துள்ள "பரம்பொருள் "---மற்ற இடங்களை படைக்கும்முன் --இந்த இடத்தை முதலில் படைத்து ,நிலைநிறுத்தி --இந்த இடத்தில் வந்து நிலையாக தங்கியிருந்து --தன் கருணையை அனைத்துயிர்களுக்கும் வழங்கிக்கொண்டிருக்கின்றான் ----
இதன் பெருமை இன்னும் உள்ளது --அதையும் சொல்லுகின்றேன் ,கேளுங்கள் .
********************************************************************************
திருவால வாய் என்று கேட்டவரே அறம் பெறுவர்
செல்வம் ஓங்கும்
திருவால வாய் என்று நினைத்தவரே பொருள் அடைவர்
தேவ தேவைத்
திருவால வாயிடத்துக் கண்டவரே இன்ப நலம் சேர்வர்
என்றும்
திருவால வாயிடத்து வதிந்தவரே வீட்டு நெறி சேர்வர் அன்றே.
விளக்கம் 238
"திரு ஆலவாய் "என்ற பெயரை பிறர் சொல்ல கேட்பவர்கள் --தருமத்தை செய்தவர்கள் ஆவார்கள் --அவர்களின் செல்வம் வளர்ந்துகொண்டிருக்கும் --
"திரு ஆலவாய் "என்று நினைக்கின்றவர்கள் --தான் விரும்பும் பொருள்களை அடைவார்கள் --
தேவர்களுக்கு எல்லாம் தலைவனான இறைவன் உறையும் "திரு ஆலவாயை "நேரில் தரிசித்தவர்கள் தான் --இன்பங்களை அனைத்தும் பெற்று நலம் பெறுவார்கள் --
எப்பொழுதும் "திரு ஆலவாயில் "வசிப்பவர்கள் --முக்தியை அடைவார்கள் --இதை மாற்றம் இல்லை .
*********************************************************************************
"திரு ஆலவாய் "என்று நினைக்கின்றவர்கள் --தான் விரும்பும் பொருள்களை அடைவார்கள் --
தேவர்களுக்கு எல்லாம் தலைவனான இறைவன் உறையும் "திரு ஆலவாயை "நேரில் தரிசித்தவர்கள் தான் --இன்பங்களை அனைத்தும் பெற்று நலம் பெறுவார்கள் --
எப்பொழுதும் "திரு ஆலவாயில் "வசிப்பவர்கள் --முக்தியை அடைவார்கள் --இதை மாற்றம் இல்லை .
*********************************************************************************
சுர நதி சூழ் காசிமுதல் பதிமறுமைக்கு கதி அளிக்கும்
தூநீர் வைகை
வரநதி சூழ் திருவால வாய் சீவன் முத்தி தரும்
வதிவோர்க்கு ஈது
திரன் அதிகம் பரகதியும் பின்கொடுக்கும் ஆதலின்
இச் சீவன் முத்தி
புரன் அதிகம் என்பது எவன் அதற்கு அதுவே ஒப்பாம்
எப் புவனத்து உள்ளும்.
விளக்கம் 239
தூய்மையான நீரை உடைய "வைகை "எனும் வரம் தரும் நதி சூழ உள்ள "திரு ஆலவாய் "--இங்கு வசிப்பவர்களுக்கு --வாழும் காலத்திலேயே "ஜீவன் முக்தியை" கொடுக்கும் சக்தி அதிகம் -----இறந்த பின் "பிறவா முக்தியையும் "கொடுக்கும் --
ஆதலால் --வாழும்போதே "ஜீவன் முக்தியை "தரும் தன்மை அதிகம் ஆதலால் --இந்த தலத்திற்கு இத்தலமே சமம் ஆகும் --
எல்லா உலகத்திலும் -- இதற்கு இணையாக உள்ள தலம் --இல்லை
*********************************************************************************
ஆதலின் இப் பதி விட்டு பிற பதியில் போய்
நோற்போர் அங்கை கொண்ட
சீதள வானமும் தேய்ப்பத் தித்திக்கத் தேம் பெய்து
செய்த தீம் பால்
ஓதனத்தைக் கைவிட்டுப் புறம் கையை நக்குவார்
ஒப்பார் இந்த
மாதலத்தின் பெருமைதனை யாவரே அளவிட்டு
வழுத்தற் பாலார்
விளக்கம் 240
அதனால் --இத்தகைய சிறப்பு பெற்ற --இத்தலத்தை விட்டு விட்டு --வேறு தலத்திற்கு சென்று தவம் செய்பவர்கள் ---
தன்னுடைய புறங்கையை நக்குபவர்களுக்கு --சமமாவார்கள் .
இந்த உயர்வுபெற்ற தலத்தின் பெருமையை யார்தான் அளவிட்டு சொல்ல முடியும் .---ஒருவராலும் முடியாது .
*********************************************************************************
மற்றைய தலங்கள் தம்மில் பரிமகம் வாச பேயம்
அற்றம் இல் சோடசாக அக்கினி இட்டு ஓமம் யார்க்கும்
முற்றரும் இராச சூய முதன் மக முடித்த பேறும்
செற்றம் இற ரிச பூர்ண முதல் இட்டி செய்த பேறும்.
விளக்கம் 241
மற்ற பிற தலங்களில் --செய்யப்பெற்ற --அசுவமேதம் ,வாசபேயம் ,குற்றம் இல்லாத "சோடசாகம் ",அக்கினி ஹோமம் ---
யாரும் செய்வதற்கு சிரமமான "இராசசூய யாகம் "--முதலிய யாகங்கள் தரும் பலனும் ----
குற்றம் இல்லாத பரிபூரணமான பூசை ,வேள்வி --முதல் --தானம் வரை செய்யப்பெற்றதால் வரும் பலனும் -------
*****************************************************************************
பாடல் 242
எள் இழுது அன்னம் கன்னி இவுளி தேர் யானை
இல்லம்
வெள்ளியான் பொன் பூண் ஆடை விளைவொடு
பழனம் உன்னாத்
தள்ளரும் அடிமை ஆதி தானங்கள் செய்த பேறும்
வள்ளறன் காசி ஆதிப் பதிகளில் வதிந்த பேறும்.
விளக்கம் 242
எள்,நெய் ,அன்னம் ,கன்னிப்பெண் ,குதிரை ,தேர் ,யானை ,இல்லம் ,வெள்ளி ,பசு ,பொன் ,அணிகலன் ,ஆடை ,நன்கு விளைந்த விளைநிலம் ,என்றும் நம்மைவிட்டு நீங்காமல் நமக்கு பணிவிடை செய்யும் பணியாள் --முதலிய தானங்கள் தருவதால் உண்டாகும் நற்பலனும் ---
கேட்டததை எல்லாம் கொடுக்கும் வள்ளலாகிய "சிவபிரான் "வாழும் காசி முதலிய சிறப்புப்பெற்ற இடங்களில் வாழுவதால் உண்டாகும் நற்பலனும் --
********************************************************************************* பாடல் 243
கங்கை காளிந்தி வாணி காவிரி கண்ண வேணி
துங்க பத்திரை தீம் பாலி தூய தன் பொருநை
முன்னாச்
சங்கையில் நதிகள் முற்றும் ஆடிய தவத்தின் பேறும்
மங்கல மதுரை தன்னில் வைகலும் வதிவோர்க்கு
எய்தும்.
விளக்கம் 243
மங்களம் நிறைந்த மதுரையில் --நாள்தோறும் வசிப்பவர்களுக்கு உண்டாகும் .
பொருள்எழுதியவர்
DR.S.வீரம்மா தேவி .MBBS
***************************************************************************************************************************************************************************************************************************************************