MEENATCHI AMMAN TEMPLE--MADURAI |
திருவிளையாடல் புராணம்
ஓம் நமசிவாய
பாண்டித் திருநாட்டு படலம்
திருநாட்டுச் சிறப்பு --பகுதி 6
பாடல் --82
விளக்கம் ---82
ஏக மாகிய மேருவும் பொதியமே யிரும்பொன் ஆகு மேருவைச் சூழ்ந்தசாம் பூநத யாறு நாக ராடுதண் பொருநையே நாவலா றுடுத்த போக பூமியும் பொருநைசூழ் பூமியே போலும். |
ஒன்றே ஒன்றுதான் இதற்க்கு இணையாக வேறு இல்லை எனப்படும் --ஏகமான மேருமலையும் பொதியமலை க்கு நிகரானது என்று சொல்லப்படும்படிதான் உள்ளது --அவ்வளவு சிறப்பு பெற்று விளங்குகின்றது பொதியமலை ---
அந்த பொன்போல ஒளிரும் மேருமலையை சுற்றி ஓடும் 'சாம்பூநதம் 'என்னும் ஆறு ,நாகர்கள் என்னும் தேவர்கள் நீராடி மகிழும் 'பொருநை நதி 'க்கு சமமானதே --
அந்த 'சாம்பூதநதம் 'ஆற்றிற்கு அடுத்து உள்ள 'போகபூமி 'யும் --பொருநை நதியால் சூழப்பெற்ற பாண்டிய நாட்டிற்கு நிகராகத்தான் விளங்குகின்றது .
**************************************************---------------51
பாடல் --83
சிறந்த தண்டமி ழாலவாய் சிவனுல கானாற் புறந்த யங்கிய நகரெலாம் புரந்தரன் பிரமன் மறந்த யங்கிய நேமியோ னாதிய வானோர் அறந்த யங்கிய வுலகுரு வானதே யாகும். |
விளக்கம் ---83
சிறந்த தன்மைகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற தமிழ்மொழியை உடைய ஆலவாய் எனப்படும் 'மதுரை மாநகரம் '--'சிவலோக வடிவமே '--
அந்த நகரத்திற்கு வெளியே சுற்றிலும் காணப்படும் நகரங்கள் யாவும் --இந்திரன் ,பிரம்மா ,வீரம் செழித்து விளங்கும் சக்கரப்படையை உடைய திருமால் முதலிய வானவர்கள் வாழும் ----அறத்தை நிலைகொண்ட உலகைப்போலவே விளங்குகின்றது .
*******************************************-----------------------52
பாடல் --84
வளைந்த நுண்ணிடை மடந்தையர் வனமுலை மெழுகிக் களைந்த குங்குமக் கலவையுங் காசறைச் சாந்தும் அளைந்த தெண்டிரைப் பொருநையோ வந்நதி ஞாங்கர் விளைந்த செந்நெலும் கன்னலும் வீசுமவ் வாசம். |
விளக்கம் --84
வளைந்த மெல்லிய இடையை உடைய பெண்கள் ---தங்களுடைய மார்பகத்தில் பூசி பின் கழுவும் ---குங்குமக்கலவையும் கஸ்த்தூரியும் சந்தனமும் ---பொருநைநதியில் கலந்து ஓடுவதால் --அந்த நதியில் மட்டுமா அதன் வாசனை வீசுகின்றது ---
அந்த நதியின் நீர் பாய்வதால் விளைந்த செந்நெல்லிலும் கரும்பிலும் அந்த மணம் வீசுகின்றது .
******************************************-----------------------53
பொதியமலையிலே சந்தனமரங்கள் விளைகின்றது ---
பொதியமலையிலிருந்து வரும் நதியில் முத்துக்கள் விளைகின்றன ---
அந்த நதியால் சூழப்பட்ட நாட்டிலே தருமங்கள் விளைகின்றன ---
அந்த நாட்டில் வாழும் மக்களின் மதியிலே [மனதிலே ]வேதமுதல்வனாம் இறைவனின் மீது பக்தி விளைகின்றன ----
****************************************************----------------54
விஷத்தை அவிர்பாகமாக பெற்று அதை தன் கழுத்தில் நிறுத்தி நீலகண்டனாகிய இறைவனும் --
தென்திசையாம் பாண்டியநாட்டை விரும்பி அருகில் வந்து நடனம் ஆடுகின்றான் --
ஏனென்றால் அங்குதான் அப்படி இறைவன் நடமாடியதால் ஏற்படும் களைப்பு ---
பொதியமலையிலிருந்து சந்தனத்தை சுமந்துவரும் மெல்லிய தென்றல் காற்று அவரின் முகத்தில் பட்டு தடவிச் செல்வதால் நீங்குகின்றது --
மேலும்அதைத் தொடர்ந்துவரும் 'தமிழ் 'அவருடைய திருச்செவியில் விழுவதால் ஏற்படும் இன்பத்தை அனுபவிப்பதற்காகவும் அல்லவா !!
*********************************************************------------------55
இடபவாகனத்தை [ரிஷப வாகனம் ] செலுத்தும் இறைவனான சிவபெருமான் --முன்னொருகாலத்தில்' பாணினி முனிவருக்கு 'வடமொழியாம் சமஸ்கிருத மொழியின்' இலக்கணத்தை போதித்தருளினார் ----
அந்த பெருமானே,, பொதியமலையில் வாழும் அகத்திய முனிவருக்கு திடமாக பயிற்றுவித்து --அந்த வடமொழிக்கு எதிர் இணையான
பெருமைமிகுந்தமொழியாகவும் தென்னாட்டுக்கு உரிய மொழியாகவும் விளங்கச்செய்த --
'தமிழ் மொழி 'என்னும் நங்கைக்கு --நடனமாடும் அரங்கம் --என்பது --
இந்த பாண்டியநாடல்லவா !
*********************************************--------------------56
நெற்றிக்கண்ணை உடைய முதற்கடவுளாகிய 'சிவபெருமான் 'வந்து இங்கு தமிழ்ச்சங்கத்தில் அமர்ந்து ---
இலக்கண வரம்புகளை எல்லாம் மிக்க ஆழமாக ஆராய்ந்து --குற்றங்குறைகளை எல்லாம் நீக்கி செம்மைப்படுத்திய ---
என்றும் பசுமையுடன் [இளமையுடன் ]விளங்கும் 'தமிழ் மொழியை '--
மற்ற இடங்களில் காணப்படும் இலக்கண வரம்பு இல்லாத பிறமொழிகளைப்போல எண்ணி ---
இடையில் வந்த மொழி ,இதற்க்கு என்ன சிறப்பு உள்ளது --என்பது போல சாதாரணமாக எண்ணவும் முடியுமா ??
********************************************** ----------------------57
அடியவர்களின் தலைவனான சிவபெருமானை ,தூதுசொல்ல அனுப்பியதும் ----
முதலை உண்ட பாலகனை அழைத்து உயிருடன் கொடுத்ததும் ---
சாம்பல் குவியலில் இருந்த எலும்பை பெண்ணுருவுவாக எழுப்பியதும் ---
மறைகளான வேதங்களால் மூடப்பட்ட கதவை திறந்ததும் ---
கன்னியான இனிமையும் குளிர்ச்சியும் நிறைந்த தமிழ்ச்சொல்லினால் தானே !!!!
மற்ற இடங்களில் காணப்படும் வேற்றுமொழி சொற்களால் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடந்ததா -----
அப்படி நடந்தது என்று ,,உங்களால் உரக்க பெருமையுடன் சொல்லமுடியுமா ---சொல்லுங்கள் ??
***********************************************--------------------58
மழையின்மையால் வெப்பம் மிகுந்து அதனால் விளைநிலங்கள் பாழ்பட்டு வறுமை வந்தாலும் ----
அரசனின் நல்ல ஆட்சியின் செழுமை மாறினாலும் ----
வறுமை என்னும் நோய் வந்து சிதைத்தாலும் ---
சிவனின் மீது கொண்ட பொய்மை இல்லாத மெய்யான பக்தி--தன்னுடைய பொலிவு குன்றாமல் --நிறைந்து காணப்படும் ---தன்மை கொண்டது ---
இந்த தருமம் தழைத்தோங்கியுள்ள 'பாண்டியநாடு '.
********************************************************------------------------59
அனைத்து உலகங்களை பெற்றவளும் ,சக்திகளில் உயர்ந்த திலகம் போன்ற நாயகியும் ----
பரஞ்சுடரும் [சிவபெருமான் ]---
பரஞ்சுடரின் மகனும் [முருகன் ]---
ஆகிய மூன்று தலைவர்களாலும் ஆட்சி செய்யப்பட நாடு இந்தப்பாண்டிய நாடு ' ---
இந்த நாடல்லாது ,,இந்த உலகில் வேறு எந்த நாடாவது இப்படிப்பட்ட சிறப்பை பெற்றிருக்கின்றதா ?
விண்ணுலகத்திலும் இப்படிப்பட்ட சிறப்பை பெற்ற இடம் உள்ளதா ?
இல்லை -- ---------------------------------------------------------60
***********************************************************************************************************************************************************************************************************************************
திருநாட்டு சிறப்பு முற்றிற்று
பாடல் --85
பொதியி லேவிளை கின்றன சந்தனம் பொதியின் நதியி லேவிளை கின்றன முத்தமந் நதிசூழ் பதியி லேவிளை கின்றன தருமமப் பதியோர் மதியி லேவிளை கின்றன மறைமுதல் பத்தி. |
விளக்கம் --85
பொதியமலையிலிருந்து வரும் நதியில் முத்துக்கள் விளைகின்றன ---
அந்த நதியால் சூழப்பட்ட நாட்டிலே தருமங்கள் விளைகின்றன ---
அந்த நாட்டில் வாழும் மக்களின் மதியிலே [மனதிலே ]வேதமுதல்வனாம் இறைவனின் மீது பக்தி விளைகின்றன ----
****************************************************----------------54
பாடல் --86
கடுக்க வின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு
விடுக்க வாரமென் காறிரு முகத்திடை வீசி
மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ.
விளக்கம் --86
கடுக்க வின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு
விடுக்க வாரமென் காறிரு முகத்திடை வீசி
மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ.
விளக்கம் --86
தென்திசையாம் பாண்டியநாட்டை விரும்பி அருகில் வந்து நடனம் ஆடுகின்றான் --
ஏனென்றால் அங்குதான் அப்படி இறைவன் நடமாடியதால் ஏற்படும் களைப்பு ---
பொதியமலையிலிருந்து சந்தனத்தை சுமந்துவரும் மெல்லிய தென்றல் காற்று அவரின் முகத்தில் பட்டு தடவிச் செல்வதால் நீங்குகின்றது --
மேலும்அதைத் தொடர்ந்துவரும் 'தமிழ் 'அவருடைய திருச்செவியில் விழுவதால் ஏற்படும் இன்பத்தை அனுபவிப்பதற்காகவும் அல்லவா !!
*********************************************************------------------55
பாடல் --87
விளக்கம் ---87
விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள் வடமொ ழிக்குரை தாங்கியல் மலயமா முனிக்குத் திடமு றுத்தியம் மொழக்கெதி ராக்கிய தென்சொல் மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ. |
அந்த பெருமானே,, பொதியமலையில் வாழும் அகத்திய முனிவருக்கு திடமாக பயிற்றுவித்து --அந்த வடமொழிக்கு எதிர் இணையான
பெருமைமிகுந்தமொழியாகவும் தென்னாட்டுக்கு உரிய மொழியாகவும் விளங்கச்செய்த --
'தமிழ் மொழி 'என்னும் நங்கைக்கு --நடனமாடும் அரங்கம் --என்பது --
இந்த பாண்டியநாடல்லவா !
*********************************************--------------------56
பாடல் --88
விளக்கம் ---88
கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக்* கிடந்ததா வெண்ணவம் படுமோ. |
இலக்கண வரம்புகளை எல்லாம் மிக்க ஆழமாக ஆராய்ந்து --குற்றங்குறைகளை எல்லாம் நீக்கி செம்மைப்படுத்திய ---
என்றும் பசுமையுடன் [இளமையுடன் ]விளங்கும் 'தமிழ் மொழியை '--
மற்ற இடங்களில் காணப்படும் இலக்கண வரம்பு இல்லாத பிறமொழிகளைப்போல எண்ணி ---
இடையில் வந்த மொழி ,இதற்க்கு என்ன சிறப்பு உள்ளது --என்பது போல சாதாரணமாக எண்ணவும் முடியுமா ??
********************************************** ----------------------57
பாடல் --89
தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை
உண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.
விளக்கம் --89
தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை
உண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.
விளக்கம் --89
முதலை உண்ட பாலகனை அழைத்து உயிருடன் கொடுத்ததும் ---
சாம்பல் குவியலில் இருந்த எலும்பை பெண்ணுருவுவாக எழுப்பியதும் ---
மறைகளான வேதங்களால் மூடப்பட்ட கதவை திறந்ததும் ---
கன்னியான இனிமையும் குளிர்ச்சியும் நிறைந்த தமிழ்ச்சொல்லினால் தானே !!!!
மற்ற இடங்களில் காணப்படும் வேற்றுமொழி சொற்களால் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடந்ததா -----
அப்படி நடந்தது என்று ,,உங்களால் உரக்க பெருமையுடன் சொல்லமுடியுமா ---சொல்லுங்கள் ??
***********************************************--------------------58
பாடல் --90
விளக்கம் --90
வெம்மை யால்விளை வஃகினும் வேந்தர்கோல் கோடிச் செம்மை மாறினும் வறுமைநோய் சிதைப்பினுஞ் சிவன்பாற் பொய்ம்மை மாறிய பத்தியும் *பொலிவுங்குன் றாவாத் தம்மை மாறியும் புரிவது தருமமந் நாடு. |
அரசனின் நல்ல ஆட்சியின் செழுமை மாறினாலும் ----
வறுமை என்னும் நோய் வந்து சிதைத்தாலும் ---
சிவனின் மீது கொண்ட பொய்மை இல்லாத மெய்யான பக்தி--தன்னுடைய பொலிவு குன்றாமல் --நிறைந்து காணப்படும் ---தன்மை கொண்டது ---
இந்த தருமம் தழைத்தோங்கியுள்ள 'பாண்டியநாடு '.
********************************************************------------------------59
பாடல் --91
விளக்கம் ---91
உலகம் யாவையு மீன்றவ ளும்பரு ளுயர்ந்த திலக நாயகி பரஞ்சுடர் சேயென மூன்று தலைவ ரான்முறை செய்தநா டிஃதன்றிச் சலதி சுலவு பாரினுண் டாகுமோ துறக்கத்து மஃதே. |
பரஞ்சுடரும் [சிவபெருமான் ]---
பரஞ்சுடரின் மகனும் [முருகன் ]---
ஆகிய மூன்று தலைவர்களாலும் ஆட்சி செய்யப்பட நாடு இந்தப்பாண்டிய நாடு ' ---
இந்த நாடல்லாது ,,இந்த உலகில் வேறு எந்த நாடாவது இப்படிப்பட்ட சிறப்பை பெற்றிருக்கின்றதா ?
விண்ணுலகத்திலும் இப்படிப்பட்ட சிறப்பை பெற்ற இடம் உள்ளதா ?
இல்லை -- ---------------------------------------------------------60
***********************************************************************************************************************************************************************************************************************************
திருநாட்டு சிறப்பு முற்றிற்று
பொருள்எழுதியவர்
DR.S.வீரம்மா தேவி .MBBS