JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Thursday, September 1, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 6


MEENATCHI AMMAN TEMPLE-MADURAI


 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                       பாண்டித் திருநாட்டு படலம் 


                            திருநாட்டுச்  சிறப்பு --பகுதி  2

பாடல் --42

           வல்லைதா யிருபால் வைகுஞ் சிவாலய மருங்கு மீண்டி


                 முல்லையா னைந்துந் தேனுந் திரைக்கையான் முகந்து வீசி
                  நல்லமான் மதஞ்சாந் தப்பு நறுவிரை மலர்தூய் நீத்தஞ்
                 செல்லலாற் பூசைத் தொண்டின் செயல்வினை மாக்கள்
                                                                                                                                       போலும்.

விளக்கம் --42

விரைந்து செல்லும் பொருனை நதியானது--- 

தன்னுடைய இரு கரைகளுக்கருகில் இருக்கும் 'சிவாலங்களுக்கு 'அருகில் தாவிச்சென்று --

முல்லை நிலத்திலிருந்து தான் எடுத்துக்கொண்டு வந்த 'பஞ்சகௌயத்தையும் '{பசு மாட்டிலிருந்து  கிடைக்கும் --பால் ,தயிர் ,நெய் ,பசுவின் சாணம் ,பசுவின் மூத்திரம் --இவை ஐந்தும் 'பஞ்சகௌயம் 'எனப்படும் .இவை சிவ அபிஷேகத்திற்கு சிறந்ததாக கருதப்படுகின்றது }   ,மற்றும் சிறந்த தேனையும் ---தன்னுடைய அலைக்கைகளால் முகர்ந்து வீசியும் ---


சிறந்த மான்களிடம் கிடைக்கும் கஸ்தூரி மற்றும் மலைக்காடுகளில் இருந்த சந்தனமரத்திலிருந்து எடுத்துவந்த சந்தனம் --ஆகிய இரண்டும் கலந்த மணம் மிக்க  குழம்பை பூசியும்  --- 

பலவித நறுமணம் வீசும் மலர்களை  தூவியும் ----

அவ்விடம் விட்டு செல்லுவதை பார்க்கும்பொழுது ---                      

இறைவனுக்கு பூசை செய்து ---தன்னுடைய  கடமையை செயல்படுத்த --அறிவுள்ளது ,அறிவற்றது என படைக்கப்பட்ட அனைத்தும் முயல்கின்றது --

என்பது  புரிகின்றது ..


                                        ********************************************----------------11

பாடல் --43

         அரும்பவி ழனங்க வாளி யலைதர வாகம் பொன்போர்த்
              திரங்கிவா லன்ன மேந்தி யிருகையுஞ் சங்கஞ் சிந்தி
              மருங்குசூழ் காஞ்சி தள்ளி வரம்பிற வொழுகும் வாரி
                பரம்பாற் கையம் பெய்யும் பார்ப்பன மகளிர் போலும்.


விளக்கம் --43

மன்மதனின் பாணங்களான மலர்கின்ற நறுமணம் வீசும் மலர்களை அலைகள் வாரித்  தர ----

அவற்றால் மூடப்பெற்ற இருகரைகலிலும் உள்ள மணற்பரப்பு தங்க நிறத்தில்  காட்சிதர---


வெள்ளை  நிற அண்ணப்பறவைகள் நீந்திக்கொண்டிருக்க ---

இரு கரைகளிலும் சங்குகளை வாரி இறைத்துக்கொண்டும்  ----

பக்கங்களில்  நெருங்கி சூழ்ந்திருந்த 'காஞ்சி மரங்களை ' தள்ளிக்கொண்டும்  ----

கரை உடையும்படி பொருநை நதி செல்லுவது ----

'சிவபெருமானுக்கு 'பிச்சையிட்ட  'தாருகாவனத்து -முனி பத்தினிகளை 'போல தோற்றமளிக்கின்றது ..

                       *************************************************------------12
பாடல் --44

           
வரைபடு மணியும் பொன்னும் வைரமும் குழையும் பூட்டி
அரைபடு மகிலுஞ் சாந்து மப்பியின் னமுத மூட்டிக்
கரைபடு மருத மென்னுங் கன்னியைப் பருவ நோக்கித்
திரைபடு பொருநை நீத்தஞ் செவிலிபோல் வளர்க்கு மாதோ.

விளக்கம் --44

பொன்னும் ,மணியும் ,வைரமும்  வைத்து ,,திட்டமிட்டு நேர்த்தியாக செய்யப்பட்ட  காதணிகளை  போட்டுவிட்டு ---

அரைத்த  அகில் சந்தனக்கலவையை  பூசி ,இனிமையான அமுதம் போன்ற உணவை ஊட்டி  ---ஒரு செவிலித்தாய் தன்னுடைய 'கன்னிப்பெண்ணை  அந்த பருவத்திற்குரிய  கவனத்துடன் வளர்ப்பதுபோல ---

தன்னுடைய கரைகளில் இருந்த 'மருதம் 'என்னும் நிலப்பரப்பை 
அலைவீசும் நீர்ப்பெருக்கை உடைய 'பொருநை 'என்னும் தாய் நித்தம் நித்தம்  கவனமுடன்  வளர்க்கின்றாள் .


                               *************************************---------------13
பாடல் --45

                 மறைமுதற் கலைக ளெல்லா மணிமிடற் றவனே யெங்கும் 
                   நிறைபர மென்றும் பூதி சாதன நெறிவீ டென்றும்
                அறைகுவ தறிந்துந் தேறா ரறிவெனக் கலங்கி யந்த
                முறையின்வீ டுணர்ந்தோர் போலத் தெளிந்தது மூரிவெள்ளம்

.
விளக்கம் --45


வேதம் முதலான கலைகள் எல்லாம் ---

'நீலகண்டனான -சிவபெருமான் 'தான்   எங்கும் நிறைந்த பரம்பொருள் என்றும் ----

திருநீறு ,பஞ்சாட்சர மந்திரமாம் --நமசிவாய -- என்னும் இவைகள்  தான் 'வீடுபேறு 'அடைவதற்கான வழி  என்றும் ---

ஆணித்தரமாக கூறுவதை அறிந்த பின்னும் --அதை ஏற்றுக்கொள்ளாதவர்களின்  கலங்கிய அறிவுபோல்  ,, ----

கலங்கி----அதன் பின் 

மேற்க்கூறிய முறைகளை மேற்கொண்டு உண்மைப்பொருளை உணர்ந்தவர்களின்   அறிவு போல் தெளிந்து  ---

செல்லுகின்றது  பொருநை  வெள்ளம் ..


                            ******************************************-------------------14

பாடல் --46

  மறைவழி கிளைத்த வெண்ணெண் கலைகள்போல் வருநீர் வெள்ளந்     
 துறைவழி யொழுகும் பல்கால் சோலைதண் பழனஞ் செய்தேன்
 உறைவழி யோடை யெங்கு  மோடிமன் றுடையார்க் கன்பர்
   நிறைவழி யாத வுள்ளத் தன்புபோ னிரம்பிற் றன்றே.



விளக்கம் --46

நான்கு வேதங்களின் வழியாக கிடைக்கப்பெற்ற  64  கலைமகளை போல பொங்கி வருகின்ற பொருநை வெள்ளமானது ----

அதன் கரைகளில் இருந்த மருத நிலத்தைச் சேர்ந்த   கழனிகள் ,சோலைகள்  என எல்லா நிலப்பரப்பையும் வளம்  கொழிக்கச்செய்து  ----


முழுமை பெற்ற  ஞானம் உடையவர்களின் அன்பரான இறைவனுடைய   [சிவபெருமானின் ]உள்ளத்து அன்பு -கொடுக்கக்கொடுக்க  குறையாமல் நிறைந்து ததும்பி  வழிந்துகொண்டிருப்பதுபோல  ----

மக்கள் வாழும் இடங்களுக்கு [ஊருக்கு ] வாய்க்கால்கள்  வழியாக ஓடிச்சென்று  நிரம்பிற்று ---

குறிப்பு ;--

அனைத்து ஜீவாத்மாக்களும்  பெண் எனவும் ---

பரமாத்மா  ஒன்றே  ஆணாகவும் ---

அவரிடம் இரண்டறக்கலப்பதே  முக்தி எனவும் ---

கூறப்படுகின்றது 

எனவே ஞானம் அடைந்தவர்கள்[ஆண் ,பெண் ] இறைவனையே தன்னுடைய கணவராக [அன்பர் ]பாவிப்பார்கள் 


                           **************************************----------------------15
பாடல் --47

              இழிந்த மாந்தர்கைப் பொருள்களு மிகபரத் தாசை
              கழிந்த யோகியர் கைப்படிற் றூயவாய்க் களங்கம்
              ஒழிந்த வாறுபோ லுவரியுண் டுவர்கெடுத் தெழிலி
             பொழிந்த நீரமு தாயின புவிக்கும்வா னவர்க்கும்.


விளக்கம் --47

தீயகுணமுள்ள மனிதர்களின் பொருள்களின்மீது ---

இந்த உலகம் மற்றும் இதைக்கடந்த உலகம் --என அனைத்து உலக ஆசைகளையும் அழித்த 'யோகியரின்  ' கைபட்டவுடன் ---

அந்தக்கணமே அதில் இருந்த களங்கம் நீங்கப்பெற்று தூய்மையாகிவிடுவது போல ---

கடல்நீரான உப்புநீரை குடித்து ,உப்பை நீக்கி --மேகமானது பொழிந்த  நன்னீரானது   ---இந்த பூமிக்கும் அதில் வாழும் அனைத்து உயிர்களுக்கும்  மற்றும் வானவர்க்கும்  அமுதம் போல ஆயிற்று .


                              *************************************************-------------16
பாடல் --48

          ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற
                வேறு வேறுபேர் பெற்றென வேலைந ரொன்றே
               ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
                 மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.


விளக்கம் --48


அழிவில்லாதவளாகிய சிவசக்தியான ஒருத்தியே --ஐந்து தொழில்களான --படைத்தல் ,காத்தல் ,அழித்தல் ,மறைத்தல் ,அருளுதல் --முதலியவைகளை செய்ய --பிரம்மா ,விஷ்ணு ,ருத்திரன் ,ஈஸ்வரன் ,சதாசிவன் ---முறையே பல பெயர்களை பெற்று --நடத்தி அருளுகின்ற  தாயாவாள் --அதைப்போல 

கடல் நீர் -என்ற மூல நீர் -ஒன்றே ---ஆறாக ஓடும் பொழுது 'ஆற்று நீர் 'என்றும் ,கால்வாயில் ஓடும் பொழுது--  கால்வாய் நீர் என்றும் ,குளத்தில் -குளத்து நீர் என்றும் ,கிணற்றில் --கிணற்றுநீர் என்றும் ,அகண்ட ஏரியில் --ஏரிநீர்  என்றும் ---இடத்துக்கு தக்கவாறு பல பெயர்களை  பெற்று  ---

எண்ணிக்கை கூற முடியாதபடி உள்ள  ,அளவுகடந்த  பயிர்களையெல்லாம் வளர்க்கும் தாய்  ஆகும் .

                           *************************************************-----------------17
பாடல் --49

களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்.



விளக்கம் --49

உழவர்கள் ,அவர்களுக்கு தங்கத்தை போல மதிப்புமிக்கதாக விளங்கும் 'ஏரை 'பூட்டி ---

தாயின் வாயிலிருந்து கனிந்த அன்பினால் வரும் பாடல் ,எப்படி குழந்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்குமோ --அதுபோல --

எருமைகளும்   எருமைக்கிடாக்களும் மகிழும் வண்ணம் வளமை பொருந்திய மருதநிலப்பாடல்களை பாடி ---

மனவலிமை மிக்கவர்கள் -- எப்படி அவர்களின் ஐம்பொறிகளின்  மீது ஆட்சிசெய்து அடக்க வல்லவர்களோ --அதைப்போல --

ஐம்பூதங்கள் ஆட்சிசெய்யும் தங்கள் உழவுத்தொழிலை --வலிமையுடன் வெற்றிகொண்டு ,தங்கள் உழவுத்தொழிலைச் செய்தார்கள் .

                               ********************************************--------------18
பாடல் --50


பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி
அலமுக விரும்பு தேய வாள்வினைக் கருங்கான் மள்ளர்
நிலமக ளுடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச்
சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி யிமைக்கு                                                                                                                      மன்னோ.

விளக்கம் --50

மண்ணில் தங்கள் கால்கள் அழுந்த வேலை செய்வதால் கரிய நிறக்கால்களை உடைய வலிமைமிக்க  உழவர்கள்----  

லநிறமுள்ள  மணிகளை கோர்த்தது போல --பலநிறம்கொண்ட எருதுகளை --ஏர்கலத்திலே பூட்டி --கலப்பையின் கூர்முனை தேயும் வண்ணம் ---நிலமகளின்  உடலாகிய  தங்கள் நிலத்தை அது கிழியும் வண்ணம் அழுந்த உழும்பொழுது ---

அந்த மண்ணானது மேலும்கீழும்  பொங்கி வருவது ---போர்க்களத்தில் சிவந்த குருதியானது  பொங்கி வருவது போல தோன்றுகின்றது ,மேலும் அது   -----

கொழுந்துவிட்டு எரியும் தீச்சிதறல்களைப்போன்ற நிறத்தில் ஒளிவீச காட்சிதருகின்றது ----

குறிப்பு ;--

 அதாவது அந்த நிலம் உழவர்களால்  நன்கு பண்படுத்தப்படுகின்றது என்று அர்த்தம் 
                           ****************************************************--------------19
பாடல் --51


ஊறுசெய் படைவாய் தேய வுழுநரு நீர்கால் யாத்துச்
சேறுசெய் குநருந் தெய்வந் தொழுதுதீஞ் செந்நெல் வீசி
நாறுசெய் குநரும் பேர்த்து நடவுசெய் குநருந் தெவ்வின்
மாறுசெய் களைகட் டோம்பி வளம்படுக் குநரு மானார்.

விளக்கம் --51

அந்த உழவர்கள் உறுதியான கலப்பையின் முகப்பு தேயுமாறு இவ்வாறாக நன்கு உழுது ---நல்ல நீரை வாய்க்கால்கள்  மூலம் அந்த வயலில் நிரப்பி ------அந்த வயலை சேறாக்கி ---

மருத நிலத்திற்குரிய இந்திரனை வணங்கி ---சிறந்த விதைநெல்லை விதைத்து [வீசி ]-----வளர்த்து --

பின் நாற்றுநடுப்பவர்கள் மூலம்  ---அதை எடுத்து நடவு செய்வார்கள் ---

பின் பகைவரை போல் வளரும் களையை களைந்து எடுத்து ---நெற்பயிரை பாதுகாத்து  வளமையாக வளர்க்கின்றார்கள் . 
                       

                              *************************************************-----------------20



                                                                                                          பொருள்எழுதியவர் 
                                                                                                    DR.S.வீரம்மா தேவி .MBBS





No comments:

Post a Comment