MEENATCHI AMMAN TEMPLE-MADURAI |
திருவிளையாடல் புராணம்
ஓம் நமசிவாய
பாண்டித் திருநாட்டு படலம்
திருநாட்டுச் சிறப்பு --பகுதி 2
பாடல் --42
வல்லைதா யிருபால் வைகுஞ் சிவாலய மருங்கு மீண்டி
நல்லமான் மதஞ்சாந் தப்பு நறுவிரை மலர்தூய் நீத்தஞ்
செல்லலாற் பூசைத் தொண்டின் செயல்வினை மாக்கள்
போலும்.
வல்லைதா யிருபால் வைகுஞ் சிவாலய மருங்கு மீண்டி
முல்லையா னைந்துந் தேனுந் திரைக்கையான் முகந்து வீசி
செல்லலாற் பூசைத் தொண்டின் செயல்வினை மாக்கள்
போலும்.
விளக்கம் --42
விரைந்து செல்லும் பொருனை நதியானது---
தன்னுடைய இரு கரைகளுக்கருகில் இருக்கும் 'சிவாலங்களுக்கு 'அருகில் தாவிச்சென்று --
முல்லை நிலத்திலிருந்து தான் எடுத்துக்கொண்டு வந்த 'பஞ்சகௌயத்தையும் '{பசு மாட்டிலிருந்து கிடைக்கும் --பால் ,தயிர் ,நெய் ,பசுவின் சாணம் ,பசுவின் மூத்திரம் --இவை ஐந்தும் 'பஞ்சகௌயம் 'எனப்படும் .இவை சிவ அபிஷேகத்திற்கு சிறந்ததாக கருதப்படுகின்றது } ,மற்றும் சிறந்த தேனையும் ---தன்னுடைய அலைக்கைகளால் முகர்ந்து வீசியும் ---
சிறந்த மான்களிடம் கிடைக்கும் கஸ்தூரி மற்றும் மலைக்காடுகளில் இருந்த சந்தனமரத்திலிருந்து எடுத்துவந்த சந்தனம் --ஆகிய இரண்டும் கலந்த மணம் மிக்க குழம்பை பூசியும் ---
பலவித நறுமணம் வீசும் மலர்களை தூவியும் ----
அவ்விடம் விட்டு செல்லுவதை பார்க்கும்பொழுது ---
இறைவனுக்கு பூசை செய்து ---தன்னுடைய கடமையை செயல்படுத்த --அறிவுள்ளது ,அறிவற்றது என படைக்கப்பட்ட அனைத்தும் முயல்கின்றது --
என்பது புரிகின்றது ..
********************************************----------------11
பாடல் --43
அரும்பவி ழனங்க வாளி யலைதர வாகம் பொன்போர்த்
திரங்கிவா லன்ன மேந்தி யிருகையுஞ் சங்கஞ் சிந்தி
மருங்குசூழ் காஞ்சி தள்ளி வரம்பிற வொழுகும் வாரி
பரம்பாற் கையம் பெய்யும் பார்ப்பன மகளிர் போலும்.
விளக்கம் --43
அரும்பவி ழனங்க வாளி யலைதர வாகம் பொன்போர்த்
திரங்கிவா லன்ன மேந்தி யிருகையுஞ் சங்கஞ் சிந்தி
மருங்குசூழ் காஞ்சி தள்ளி வரம்பிற வொழுகும் வாரி
பரம்பாற் கையம் பெய்யும் பார்ப்பன மகளிர் போலும்.
விளக்கம் --43
மன்மதனின் பாணங்களான மலர்கின்ற நறுமணம் வீசும் மலர்களை அலைகள் வாரித் தர ----
அவற்றால் மூடப்பெற்ற இருகரைகலிலும் உள்ள மணற்பரப்பு தங்க நிறத்தில் காட்சிதர---
வெள்ளை நிற அண்ணப்பறவைகள் நீந்திக்கொண்டிருக்க ---
இரு கரைகளிலும் சங்குகளை வாரி இறைத்துக்கொண்டும் ----
பக்கங்களில் நெருங்கி சூழ்ந்திருந்த 'காஞ்சி மரங்களை ' தள்ளிக்கொண்டும் ----
கரை உடையும்படி பொருநை நதி செல்லுவது ----
'சிவபெருமானுக்கு 'பிச்சையிட்ட 'தாருகாவனத்து -முனி பத்தினிகளை 'போல தோற்றமளிக்கின்றது ..
*************************************************------------12
பாடல் --44
விளக்கம் --44
வரைபடு மணியும் பொன்னும் வைரமும் குழையும் பூட்டி அரைபடு மகிலுஞ் சாந்து மப்பியின் னமுத மூட்டிக் கரைபடு மருத மென்னுங் கன்னியைப் பருவ நோக்கித் திரைபடு பொருநை நீத்தஞ் செவிலிபோல் வளர்க்கு மாதோ. |
விளக்கம் --44
பொன்னும் ,மணியும் ,வைரமும் வைத்து ,,திட்டமிட்டு நேர்த்தியாக செய்யப்பட்ட காதணிகளை போட்டுவிட்டு ---
அரைத்த அகில் சந்தனக்கலவையை பூசி ,இனிமையான அமுதம் போன்ற உணவை ஊட்டி ---ஒரு செவிலித்தாய் தன்னுடைய 'கன்னிப்பெண்ணை அந்த பருவத்திற்குரிய கவனத்துடன் வளர்ப்பதுபோல ---
தன்னுடைய கரைகளில் இருந்த 'மருதம் 'என்னும் நிலப்பரப்பை
அலைவீசும் நீர்ப்பெருக்கை உடைய 'பொருநை 'என்னும் தாய் நித்தம் நித்தம் கவனமுடன் வளர்க்கின்றாள் .
*************************************---------------13
பாடல் --45
மறைமுதற் கலைக ளெல்லா மணிமிடற் றவனே யெங்கும்
நிறைபர மென்றும் பூதி சாதன நெறிவீ டென்றும்
அறைகுவ தறிந்துந் தேறா ரறிவெனக் கலங்கி யந்த
முறையின்வீ டுணர்ந்தோர் போலத் தெளிந்தது மூரிவெள்ளம்
.
விளக்கம் --45
மறைமுதற் கலைக ளெல்லா மணிமிடற் றவனே யெங்கும்
நிறைபர மென்றும் பூதி சாதன நெறிவீ டென்றும்
அறைகுவ தறிந்துந் தேறா ரறிவெனக் கலங்கி யந்த
முறையின்வீ டுணர்ந்தோர் போலத் தெளிந்தது மூரிவெள்ளம்
.
விளக்கம் --45
வேதம் முதலான கலைகள் எல்லாம் ---
'நீலகண்டனான -சிவபெருமான் 'தான் எங்கும் நிறைந்த பரம்பொருள் என்றும் ----
திருநீறு ,பஞ்சாட்சர மந்திரமாம் --நமசிவாய -- என்னும் இவைகள் தான் 'வீடுபேறு 'அடைவதற்கான வழி என்றும் ---
ஆணித்தரமாக கூறுவதை அறிந்த பின்னும் --அதை ஏற்றுக்கொள்ளாதவர்களின் கலங்கிய அறிவுபோல் ,, ----
கலங்கி----அதன் பின்
மேற்க்கூறிய முறைகளை மேற்கொண்டு உண்மைப்பொருளை உணர்ந்தவர்களின் அறிவு போல் தெளிந்து ---
செல்லுகின்றது பொருநை வெள்ளம் ..
******************************************-------------------14
பாடல் --46
மறைவழி கிளைத்த வெண்ணெண் கலைகள்போல் வருநீர் வெள்ளந்
துறைவழி யொழுகும் பல்கால் சோலைதண் பழனஞ் செய்தேன்
உறைவழி யோடை யெங்கு மோடிமன் றுடையார்க் கன்பர்
நிறைவழி யாத வுள்ளத் தன்புபோ னிரம்பிற் றன்றே.
விளக்கம் --46
மறைவழி கிளைத்த வெண்ணெண் கலைகள்போல் வருநீர் வெள்ளந்
துறைவழி யொழுகும் பல்கால் சோலைதண் பழனஞ் செய்தேன்
உறைவழி யோடை யெங்கு மோடிமன் றுடையார்க் கன்பர்
நிறைவழி யாத வுள்ளத் தன்புபோ னிரம்பிற் றன்றே.
நான்கு வேதங்களின் வழியாக கிடைக்கப்பெற்ற 64 கலைமகளை போல பொங்கி வருகின்ற பொருநை வெள்ளமானது ----
அதன் கரைகளில் இருந்த மருத நிலத்தைச் சேர்ந்த கழனிகள் ,சோலைகள் என எல்லா நிலப்பரப்பையும் வளம் கொழிக்கச்செய்து ----
முழுமை பெற்ற ஞானம் உடையவர்களின் அன்பரான இறைவனுடைய [சிவபெருமானின் ]உள்ளத்து அன்பு -கொடுக்கக்கொடுக்க குறையாமல் நிறைந்து ததும்பி வழிந்துகொண்டிருப்பதுபோல ----
மக்கள் வாழும் இடங்களுக்கு [ஊருக்கு ] வாய்க்கால்கள் வழியாக ஓடிச்சென்று நிரம்பிற்று ---
குறிப்பு ;--
அனைத்து ஜீவாத்மாக்களும் பெண் எனவும் ---
பரமாத்மா ஒன்றே ஆணாகவும் ---
அவரிடம் இரண்டறக்கலப்பதே முக்தி எனவும் ---
கூறப்படுகின்றது
எனவே ஞானம் அடைந்தவர்கள்[ஆண் ,பெண் ] இறைவனையே தன்னுடைய கணவராக [அன்பர் ]பாவிப்பார்கள்
**************************************----------------------15
பாடல் --47
இழிந்த மாந்தர்கைப் பொருள்களு மிகபரத் தாசை
கழிந்த யோகியர் கைப்படிற் றூயவாய்க் களங்கம்
ஒழிந்த வாறுபோ லுவரியுண் டுவர்கெடுத் தெழிலி
பொழிந்த நீரமு தாயின புவிக்கும்வா னவர்க்கும்.
விளக்கம் --47
தீயகுணமுள்ள மனிதர்களின் பொருள்களின்மீது ---
இந்த உலகம் மற்றும் இதைக்கடந்த உலகம் --என அனைத்து உலக ஆசைகளையும் அழித்த 'யோகியரின் ' கைபட்டவுடன் ---
அந்தக்கணமே அதில் இருந்த களங்கம் நீங்கப்பெற்று தூய்மையாகிவிடுவது போல ---
கடல்நீரான உப்புநீரை குடித்து ,உப்பை நீக்கி --மேகமானது பொழிந்த நன்னீரானது ---இந்த பூமிக்கும் அதில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் வானவர்க்கும் அமுதம் போல ஆயிற்று .
*************************************************-------------16
பாடல் --48
ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற
வேறு வேறுபேர் பெற்றென வேலைந ரொன்றே
ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.
விளக்கம் --48
அழிவில்லாதவளாகிய சிவசக்தியான ஒருத்தியே --ஐந்து தொழில்களான --படைத்தல் ,காத்தல் ,அழித்தல் ,மறைத்தல் ,அருளுதல் --முதலியவைகளை செய்ய --பிரம்மா ,விஷ்ணு ,ருத்திரன் ,ஈஸ்வரன் ,சதாசிவன் ---முறையே பல பெயர்களை பெற்று --நடத்தி அருளுகின்ற தாயாவாள் --அதைப்போல
கடல் நீர் -என்ற மூல நீர் -ஒன்றே ---ஆறாக ஓடும் பொழுது 'ஆற்று நீர் 'என்றும் ,கால்வாயில் ஓடும் பொழுது-- கால்வாய் நீர் என்றும் ,குளத்தில் -குளத்து நீர் என்றும் ,கிணற்றில் --கிணற்றுநீர் என்றும் ,அகண்ட ஏரியில் --ஏரிநீர் என்றும் ---இடத்துக்கு தக்கவாறு பல பெயர்களை பெற்று ---
எண்ணிக்கை கூற முடியாதபடி உள்ள ,அளவுகடந்த பயிர்களையெல்லாம் வளர்க்கும் தாய் ஆகும் .
*************************************************-----------------17
பாடல் --49
களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்.
விளக்கம் --49
உழவர்கள் ,அவர்களுக்கு தங்கத்தை போல மதிப்புமிக்கதாக விளங்கும் 'ஏரை 'பூட்டி ---
தாயின் வாயிலிருந்து கனிந்த அன்பினால் வரும் பாடல் ,எப்படி குழந்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்குமோ --அதுபோல --
எருமைகளும் எருமைக்கிடாக்களும் மகிழும் வண்ணம் வளமை பொருந்திய மருதநிலப்பாடல்களை பாடி ---
மனவலிமை மிக்கவர்கள் -- எப்படி அவர்களின் ஐம்பொறிகளின் மீது ஆட்சிசெய்து அடக்க வல்லவர்களோ --அதைப்போல --
ஐம்பூதங்கள் ஆட்சிசெய்யும் தங்கள் உழவுத்தொழிலை --வலிமையுடன் வெற்றிகொண்டு ,தங்கள் உழவுத்தொழிலைச் செய்தார்கள் .
********************************************--------------18
பாடல் --50
விளக்கம் --50
மண்ணில் தங்கள் கால்கள் அழுந்த வேலை செய்வதால் கரிய நிறக்கால்களை உடைய வலிமைமிக்க உழவர்கள்----
பலநிறமுள்ள மணிகளை கோர்த்தது போல --பலநிறம்கொண்ட எருதுகளை --ஏர்கலத்திலே பூட்டி --கலப்பையின் கூர்முனை தேயும் வண்ணம் ---நிலமகளின் உடலாகிய தங்கள் நிலத்தை அது கிழியும் வண்ணம் அழுந்த உழும்பொழுது ---
அந்த மண்ணானது மேலும்கீழும் பொங்கி வருவது ---போர்க்களத்தில் சிவந்த குருதியானது பொங்கி வருவது போல தோன்றுகின்றது ,மேலும் அது -----
கொழுந்துவிட்டு எரியும் தீச்சிதறல்களைப்போன்ற நிறத்தில் ஒளிவீச காட்சிதருகின்றது ----
குறிப்பு ;--
அதாவது அந்த நிலம் உழவர்களால் நன்கு பண்படுத்தப்படுகின்றது என்று அர்த்தம்
****************************************************--------------19
பாடல் --51
விளக்கம் --51
அந்த உழவர்கள் உறுதியான கலப்பையின் முகப்பு தேயுமாறு இவ்வாறாக நன்கு உழுது ---நல்ல நீரை வாய்க்கால்கள் மூலம் அந்த வயலில் நிரப்பி ------அந்த வயலை சேறாக்கி ---
மருத நிலத்திற்குரிய இந்திரனை வணங்கி ---சிறந்த விதைநெல்லை விதைத்து [வீசி ]-----வளர்த்து --
பின் நாற்றுநடுப்பவர்கள் மூலம் ---அதை எடுத்து நடவு செய்வார்கள் ---
பின் பகைவரை போல் வளரும் களையை களைந்து எடுத்து ---நெற்பயிரை பாதுகாத்து வளமையாக வளர்க்கின்றார்கள் .
*************************************************-----------------20
அதன் கரைகளில் இருந்த மருத நிலத்தைச் சேர்ந்த கழனிகள் ,சோலைகள் என எல்லா நிலப்பரப்பையும் வளம் கொழிக்கச்செய்து ----
முழுமை பெற்ற ஞானம் உடையவர்களின் அன்பரான இறைவனுடைய [சிவபெருமானின் ]உள்ளத்து அன்பு -கொடுக்கக்கொடுக்க குறையாமல் நிறைந்து ததும்பி வழிந்துகொண்டிருப்பதுபோல ----
மக்கள் வாழும் இடங்களுக்கு [ஊருக்கு ] வாய்க்கால்கள் வழியாக ஓடிச்சென்று நிரம்பிற்று ---
குறிப்பு ;--
அனைத்து ஜீவாத்மாக்களும் பெண் எனவும் ---
பரமாத்மா ஒன்றே ஆணாகவும் ---
அவரிடம் இரண்டறக்கலப்பதே முக்தி எனவும் ---
கூறப்படுகின்றது
எனவே ஞானம் அடைந்தவர்கள்[ஆண் ,பெண் ] இறைவனையே தன்னுடைய கணவராக [அன்பர் ]பாவிப்பார்கள்
**************************************----------------------15
பாடல் --47
இழிந்த மாந்தர்கைப் பொருள்களு மிகபரத் தாசை
கழிந்த யோகியர் கைப்படிற் றூயவாய்க் களங்கம்
ஒழிந்த வாறுபோ லுவரியுண் டுவர்கெடுத் தெழிலி
பொழிந்த நீரமு தாயின புவிக்கும்வா னவர்க்கும்.
விளக்கம் --47
தீயகுணமுள்ள மனிதர்களின் பொருள்களின்மீது ---
இந்த உலகம் மற்றும் இதைக்கடந்த உலகம் --என அனைத்து உலக ஆசைகளையும் அழித்த 'யோகியரின் ' கைபட்டவுடன் ---
அந்தக்கணமே அதில் இருந்த களங்கம் நீங்கப்பெற்று தூய்மையாகிவிடுவது போல ---
கடல்நீரான உப்புநீரை குடித்து ,உப்பை நீக்கி --மேகமானது பொழிந்த நன்னீரானது ---இந்த பூமிக்கும் அதில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் வானவர்க்கும் அமுதம் போல ஆயிற்று .
*************************************************-------------16
பாடல் --48
ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற
வேறு வேறுபேர் பெற்றென வேலைந ரொன்றே
ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.
விளக்கம் --48
அழிவில்லாதவளாகிய சிவசக்தியான ஒருத்தியே --ஐந்து தொழில்களான --படைத்தல் ,காத்தல் ,அழித்தல் ,மறைத்தல் ,அருளுதல் --முதலியவைகளை செய்ய --பிரம்மா ,விஷ்ணு ,ருத்திரன் ,ஈஸ்வரன் ,சதாசிவன் ---முறையே பல பெயர்களை பெற்று --நடத்தி அருளுகின்ற தாயாவாள் --அதைப்போல
கடல் நீர் -என்ற மூல நீர் -ஒன்றே ---ஆறாக ஓடும் பொழுது 'ஆற்று நீர் 'என்றும் ,கால்வாயில் ஓடும் பொழுது-- கால்வாய் நீர் என்றும் ,குளத்தில் -குளத்து நீர் என்றும் ,கிணற்றில் --கிணற்றுநீர் என்றும் ,அகண்ட ஏரியில் --ஏரிநீர் என்றும் ---இடத்துக்கு தக்கவாறு பல பெயர்களை பெற்று ---
எண்ணிக்கை கூற முடியாதபடி உள்ள ,அளவுகடந்த பயிர்களையெல்லாம் வளர்க்கும் தாய் ஆகும் .
*************************************************-----------------17
பாடல் --49
களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்.
விளக்கம் --49
உழவர்கள் ,அவர்களுக்கு தங்கத்தை போல மதிப்புமிக்கதாக விளங்கும் 'ஏரை 'பூட்டி ---
தாயின் வாயிலிருந்து கனிந்த அன்பினால் வரும் பாடல் ,எப்படி குழந்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்குமோ --அதுபோல --
எருமைகளும் எருமைக்கிடாக்களும் மகிழும் வண்ணம் வளமை பொருந்திய மருதநிலப்பாடல்களை பாடி ---
மனவலிமை மிக்கவர்கள் -- எப்படி அவர்களின் ஐம்பொறிகளின் மீது ஆட்சிசெய்து அடக்க வல்லவர்களோ --அதைப்போல --
ஐம்பூதங்கள் ஆட்சிசெய்யும் தங்கள் உழவுத்தொழிலை --வலிமையுடன் வெற்றிகொண்டு ,தங்கள் உழவுத்தொழிலைச் செய்தார்கள் .
********************************************--------------18
பாடல் --50
பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி அலமுக விரும்பு தேய வாள்வினைக் கருங்கான் மள்ளர் நிலமக ளுடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச் சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி யிமைக்கு மன்னோ. |
விளக்கம் --50
மண்ணில் தங்கள் கால்கள் அழுந்த வேலை செய்வதால் கரிய நிறக்கால்களை உடைய வலிமைமிக்க உழவர்கள்----
பலநிறமுள்ள மணிகளை கோர்த்தது போல --பலநிறம்கொண்ட எருதுகளை --ஏர்கலத்திலே பூட்டி --கலப்பையின் கூர்முனை தேயும் வண்ணம் ---நிலமகளின் உடலாகிய தங்கள் நிலத்தை அது கிழியும் வண்ணம் அழுந்த உழும்பொழுது ---
அந்த மண்ணானது மேலும்கீழும் பொங்கி வருவது ---போர்க்களத்தில் சிவந்த குருதியானது பொங்கி வருவது போல தோன்றுகின்றது ,மேலும் அது -----
கொழுந்துவிட்டு எரியும் தீச்சிதறல்களைப்போன்ற நிறத்தில் ஒளிவீச காட்சிதருகின்றது ----
குறிப்பு ;--
அதாவது அந்த நிலம் உழவர்களால் நன்கு பண்படுத்தப்படுகின்றது என்று அர்த்தம்
****************************************************--------------19
பாடல் --51
ஊறுசெய் படைவாய் தேய வுழுநரு நீர்கால் யாத்துச் சேறுசெய் குநருந் தெய்வந் தொழுதுதீஞ் செந்நெல் வீசி நாறுசெய் குநரும் பேர்த்து நடவுசெய் குநருந் தெவ்வின் மாறுசெய் களைகட் டோம்பி வளம்படுக் குநரு மானார். |
விளக்கம் --51
அந்த உழவர்கள் உறுதியான கலப்பையின் முகப்பு தேயுமாறு இவ்வாறாக நன்கு உழுது ---நல்ல நீரை வாய்க்கால்கள் மூலம் அந்த வயலில் நிரப்பி ------அந்த வயலை சேறாக்கி ---
மருத நிலத்திற்குரிய இந்திரனை வணங்கி ---சிறந்த விதைநெல்லை விதைத்து [வீசி ]-----வளர்த்து --
பின் நாற்றுநடுப்பவர்கள் மூலம் ---அதை எடுத்து நடவு செய்வார்கள் ---
பின் பகைவரை போல் வளரும் களையை களைந்து எடுத்து ---நெற்பயிரை பாதுகாத்து வளமையாக வளர்க்கின்றார்கள் .
*************************************************-----------------20
பொருள்எழுதியவர்
DR.S.வீரம்மா தேவி .MBBS
No comments:
Post a Comment