MADURAI MEENATCHI AMMAN TEMPLE |
திருவிளையாடல் புராணம்
ஓம் நமசிவாய
கடவுள் வாழ்த்து
பரமசிவம்
பாடல் --6
பூவண்ணம் பூவின் மணம்போல மெய்போத மின்பம்*
ஆவண்ண மெய்கொண்ட வன்றன் வலியாணை தாங்கி
மூவண்ண றன்சந் நிதிமுத் தொழில்செய்ய வாளா
மேவண்ண லன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம். [6]
பூவினுடைய நிறமும் ,மணமும் --அந்த பூவை விட்டு அகலாது இருப்பதை போல் ---உண்மையான அறிவினால் ஏற்படும் ஆனந்தத்தை --தன்னுள்ளே இயல்பாய் அமையப்பெற்ற --அழகிய திருவடிவத்தை கொண்டவனும் ---
ஆவண்ண மெய்கொண்ட வன்றன் வலியாணை தாங்கி
மூவண்ண றன்சந் நிதிமுத் தொழில்செய்ய வாளா
மேவண்ண லன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம். [6]
விளக்கம் --6
பூவினுடைய நிறமும் ,மணமும் --அந்த பூவை விட்டு அகலாது இருப்பதை போல் ---உண்மையான அறிவினால் ஏற்படும் ஆனந்தத்தை --தன்னுள்ளே இயல்பாய் அமையப்பெற்ற --அழகிய திருவடிவத்தை கொண்டவனும் ---
தன் முன்னிலையில் _ தன்னுடைய சக்தியாகிய 'சக்தி தேவியின் 'ஆணையால் __ ஆக்கல் ,காத்தல் ,அழித்தல் ___ என்னும் முத்தொழிலை ---அயன் ,அரி ,அரன் --ஆகிய மூவரும் முறையே செய்துவர ---
எந்த சலனமும் இல்லாமல் ஆனந்த மௌனத்தில் நின்று ,நிலைபெற்றிருக்கும் சிறப்பை பெற்றவனாகிய அந்தஇறைவனின் திருவிளையாடல் -- அதாவது கருணை --நம்முடைய கர்மவினையை வென்று நமக்கு வீடுபேற்றை அளித்து விடும் .
******************************************************************************************************************************************************************
பராசக்தி
பாடல் --7
பராசக்தி
பாடல் --7
அண்டங்க ளெல்லா மணுவாக வணுக்க ளெல்லாம்
அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்
அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி யாயி னானும்
அண்டங்க ளீன்றா டுணையென்ப ரறிந்த நல்லோர் (7)
இந்த பிரபஞ்சம் முழுவதிலும் பரந்து விரிந்திருக்கும் அனைத்து அண்டங்களும் அணுக்களாகவும் ,அணுக்களெல்லாம் அண்டங்களாகவும் ---மாறி மாறி தோன்றி --பெரிதாகவும் சிறிதாகவும் ஆனாலும் ---
அந்த அண்டங்களின் உள்ளேயும் ,அண்டங்களை தாண்டி வெளியேயும் நிலைத்து நின்று ஆதாரமாக விளங்கும் இறைவன் ---
அந்த அண்டங்களை பெற்றெடுத்த உமையம்மைக்கு துணையாக இருப்பவர் என்று தெய்வத்தை தரிசித்தவர்கள் அறிவார்கள் ----
******************************************************************************************************************************************************************
சொக்கநாதர்
பாடல் --8
அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்
அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி யாயி னானும்
அண்டங்க ளீன்றா டுணையென்ப ரறிந்த நல்லோர் (7)
விளக்கம் --7
அந்த அண்டங்களின் உள்ளேயும் ,அண்டங்களை தாண்டி வெளியேயும் நிலைத்து நின்று ஆதாரமாக விளங்கும் இறைவன் ---
அந்த அண்டங்களை பெற்றெடுத்த உமையம்மைக்கு துணையாக இருப்பவர் என்று தெய்வத்தை தரிசித்தவர்கள் அறிவார்கள் ----
******************************************************************************************************************************************************************
சொக்கநாதர்
பாடல் --8
பூவி னாயகன் பூமக ணாயகன்
காவி னாயக னாதிக் கடவுளர்க்
காவி நாயக னங்கயற் கண்ணிமா தேவி நாயகன் சேவடி யேத்துவாம். (8)
காவி னாயக னாதிக் கடவுளர்க்
காவி நாயக னங்கயற் கண்ணிமா தேவி நாயகன் சேவடி யேத்துவாம். (8)
விளக்கம் --8
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா ,செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளின் தலைவனான திருமால் ,கற்பக மரத்தின் தலைவனான இந்திரன் முதலிய தேவர்களுக்கு ---அவர்களின் ஆத்மாவின் தலைவனும் ------
மீன் தன்னுடைய இமைகளை மூடாமல் தன்னுடைய குஞ்சுகளுக்கு தன் பார்வையாலேயே இரை கொடுத்து காப்பது போல ---இமை மூடாத கண்களுடன் தன் குழந்தைகளான பிரபஞ்சம் அனைத்தையும் காக்கும் 'அங்கயற் கண்ணி 'அம்மையின் கணவரும்
ஆகிய சொக்கநாதப்பெருமானின் திருவடிகளை சரணடைவோம்
******************************************************************************************************************************************************************
அங்கயற்கண்ணம்மை
பாடல் --9
பங்கயற்கண் ணரியபரம் பரனுருவே
தனக்குரிய படிவ மாகி
இங்கயற்க ணகனுலக மெண்ணிறந்த
சராசரங்க ளீன்றுந் தாழாக்
கொங்கயற்கண் மலர்க்ககூந்தற் குமரிபாண்டியன்
மகள்போற் கோலங் கொண்ட
அங்கயற்க ணம்மையிரு பாதப்போ
தெப்போது மகத்துள் வைப்போம். (9)
விளக்கம் --9
பரந்து விரிந்திருக்கும் அண்டங்களையும் அதனுள் இயங்கும் அனைத்து பொருட்களையும் பெற்றெடுத்தும் ---
சரியாத மார்பகத்தையும் ,நறுமணம் சூடிய கூந்தலையும் ,மீன் போன்ற கண்களையும் கொண்ட குமரியாக பாண்டிய மன்னனுக்கு மகளாக பிறந்த 'அங்கயற்கண்ணம்மையின் 'திருவடிகள் இரண்டையும் எக்காலத்திலும் மறவாமல் மனத்துள் வைத்து வணங்குவோம் . ----
******************************************************************************************************************************************************************
சபாபதி
பாடல் --10
உண்மையறி வானந்த வுருவாகி யெவ்வுயிர்க்கு முயிராய் நீரின்
தண்மையனல் வெம்மையெனத் தனையகலா திருந்துசரா சரங்க ளீன்ற
பெண்மையுரு வாகியதன் னானந்தக் கொடிமகிழச்சி பெருக யார்க்கும்
அண்மையதா யம்பலத்து ளாடியருள் பேரொளியை யகத்துள் வைப்பாம். (10)
விளக்கம் --10
உண்மையான அறிவால் கண்டுணரப்படும் ஆனந்தத்தின் வடிவமாக இருப்பவரை --
எப்படி தண்ணீரை விட்டு அதன் குளிர்ச்சியையும் ,தீயை விட்டு அதன் வெப்பத்தையும் தனித்து பிரிக்க முடியாதோ __ அப்படி எல்லா உயிர்களு க்குள்ளே உயிராக ,, பிரிக்க முடியாமல் இருப்பவரை ---
பெண்மை உருக்கொண்டு இந்த அண்டசராசரங்களையும் பெற்றெடுத்த சிவகாமவல்லியம்மையின் மகிழ்ச்சி பெருக ----
அனைத்து உயிர்களும் நெருங்கி அருகில் செல்ல முடிந்த நடனமேடையில் நடனமாடி அருள் புரியும்,, ஒப்பிட்டு கணிக்க முடியாத பேரொளி வடிவமாகிய ---சபாபதியை ----
நம்முடைய உள்ளத்துள் வைத்து நிலைநிறுத்திக்கொள்வோம் .
******************************************************************************************************************************************************************
சோமசுந்தரர்
பாடல் --11
சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்துநறுங்
கொன்றையந்தார் தணந்து வேப்பந்
தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி
மாணிக்கச் சுடர்ப்பூ ணேந்தி
விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு
மகனாகி மீன நோக்கின்
மடவரலை மணந்துலக முழுதாண்ட
சுந்தரனை வணக்கஞ் செய்வாம். (11)
விளக்கம் --11
தன்னுடைய சடைமுடி மறையுமாறு ,,,கதிரவனின் ஒளி போல் ஒளி வீசும் அழகிய கிரீடத்தை தலைமீது அழகுற அமையுமாறு சூடி --
தான் சூடியிருந்த நறுமணம் மிகுந்த கொன்றை மலர்களால் ஆன மாலையை எடுத்துவிட்டு ,,வேப்பம் பூவினால் ஆன மாலையை அணிந்து -- ----
தான் அணிந்திருந்த விஷம் நிறைந்த நாகங்களை கழற்றிவிட்டு ,,சுடர்வீசும் மாணிக்க கற்களால் ஆன பொன்னகைகளை அணிந்து ---
தன்னுடையதான ரிஷபக்கொடியை ,தன்னிடத்திலேயே நிறுத்திவைத்து விட்டு ,,மீன் கொடியை கையில் ஏந்திக்கொண்டு ,மீனின் பார்வை போன்ற திருநோக்கினை உடைய தடாதகைப் பிராட்டியை மணம் புரிந்து ,மலையத்துவச பாண்டிய மன்னனின் மருமகனாகி -----
அனைத்து உலகங்களையும் ஆண்டு அருள் புரிந்த சோமசுந்தரபெருமானை வணங்கி நலம்பெறுவோம் .
******************************************************************************************************************************************************************
தடாதகைப் பிராட்டியார்
பாடல் --12
செழியர்பிரான் றிருமகளாய்க் கலைபயின்று
முடிபுனைந்து செங்கோ லோச்சி
முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டு
நந்திகண முனைப்போர் சாய்த்துத்
தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டித்
தன்மகுடஞ் சூட்டிச் செல்வந்
தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி
யடிக்கமலந் தலைமேல் வைப்பாம். (12)
விளக்கம் --12
பாண்டிய மன்னனாம் மலையத்துவச மன்னனின் சிறப்புப்பெற்ற ஒரே மகளாக அவதரித்து ------
அனைத்து கலைகளையும் நன்கு கற்று ,நாட்டின் அரசியாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ,,தலையில் கிரீடம் சூடி கையில் செங்கோல் ஏந்தி ,,நல்ல முறையில் ஆட்சி செய்து ,அரச குல வழக்கப்படி ___ அனைத்து உலகங்களிலும் இருந்த எல்லா நாடுகளையும் வென்று ,,அந்த அரசர்கள் அனைவரிடமிருந்தும் அவர்கள் தரும் "திறை பொருளை "ஏற்று -------
நந்தி தேவரை தலைவராக கொண்ட சிவகணங்களையும் போர்முனையில் எதிர்கொண்டு ,,அவர்களை பலம் குன்றச்செய்து ---
அதன்பின் சிவகணங்களால் தொழப்பெறுகின்ற சிவபெருமானை பணிந்து தொழுது ,,மணமாலை சூட்டி ,,கணவராக ஏற்று ,,தனக்குரிய மகுடத்தையும் அவருக்கு அர்ப்பணித்து ,குன்றாமல் செழித்து வளரும் செல்வத்தையுடைய தன்னுடைய நாட்டின் அரசுரிமையையும் அளித்து ,,
எல்லா உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் __அழகு ,குணம் ,பண்பினால் ___ அரசியாக எக்காலத்திலும் விளங்கும் 'தடாதகைப் பிராட்டியாரின் 'தாமரைபோன்ற திருவடிகளை ,,நம் தலைமீது வைத்துக்கொள்வோம் ..
******************************************************************************************************************************************************************
கால்மாறி ஆடிய வெள்ளியம்பலவாணர்
பாடல் --13
பொருமாறிற் கிளர்தடந்தோ ளொருமாறன்
மனங்கிடந்த புழுக்க மாற
வருமாறிற் கண்ணருவி மாறாது
களிப்படைய மண்ணும் விண்ணும்
உருமாறிப் பவக்கடல்வீழ்ந் தூசலெனத்
தடுமாறி யுழலு மாக்கள்
கருமாறிக் கதியடையக் கான்மாறி
நடித்தவரைக் கருத்துள் வைப்பாம். (13)
விளக்கம் --13
பல போர்களில் வெற்றிகண்ட தோள்களை பெற்றிருந்த ,ஒரு பாண்டிய மன்னனின் மனதில் ஏற்பட்ட மிகுதியான புழுக்கம் நிறைந்த வருத்தத்தினால் அவனுடைய கண்களில் இருந்து -- அருவி போல பொழிந்த கண்ணீர் ___ ஆனந்த கண்ணீராக மாறும்படியும் --------
பிறவிக்கடலில் வீழ்ந்து,,மண்ணுலகத்திற்கும் விண்ணுலகத்திற்கும் மாறிமாறி சென்று ஊசல் போல் ஆடி க்கொண்டு ,, அதிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் உழன்று தடுமாறிகொண்டிருக்கும் --ஆத்மாக்களுக்கு ---மீண்டும் கருவில் செல்லாத விதியை அடையும்படி அருள்புரிவதற்காகவும் ------
கால் மாறி ஆடிய வெள்ளியம்பலவாணரை நம்முடைய கருத்தில் வைத்து வணங்குவோம் ..
******************************************************************************************************************************************************************
தட்சிணாமூர்த்தி
பாடல் --14
கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா
றங்கமுதற் கற்ற கேள்வி
வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமா யல்லதுமா யிருந்ததனை
யிருந்தபடி யிருந்து காட்டிச்
சொல்லாமங்ற சொன்னவரை நினையாம
னினைந்துபவத் தொடக்கை வெல்வாம். (14)
விளக்கம் --14
அனைத்து பொருட்களுக்குள்ளும் ,,அதற்கு அப்பாலும் இருக்கும் இறைவனை ,,,அவர் இருக்கும் உண்மை நிலையிலேயே ,எதையும் மறைக்காமல் -------
வாயைத்திறந்து சொல்லாமல் ,மௌனமொழியிலேயே ,கற்பித்து காட்டியவரை ------
நமக்கு நினைவு இல்லாமல் இருக்கும்போது கூட ---இடைவிடாமல் நினைத்து ----இந்த பிறவிப்பிணியை வெற்றிகொள்வோம் .
******************************************************************************************************************************************************************
சித்திவிநாயகக்கடவுள்
பாடல் --15
உள்ளமெனுங் கூடத்தி லூக்கமெனுந் தறிநிறுவி யுறுதி யாகத் தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி யிடைப்படுத்தித் தறுகட் பாசக் |
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை யென்னும் வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்துவரு வினைகள் தீர்ப்பாம். (15) |
விளக்கம் ---15
இப்படி தயார் படுத்திய நம் உள்ளத்தில் சித்தி விநாயகப்பெருமானை கட்டிவைத்து ___
நம்முடைய மனத்தில் இருந்து அறுத்து எறியவேண்டிய ,கர்மவினைகளை தொடரச்செய்யும் தீய எண்ணங்களை ஒன்றுதிரட்டி பெரிய உருண்டையாக்கி ,யானைக்கு தரும் உணவுக்கவளம் போல் --நாம் கொடுக்க ----
அதை மிக்க மகிழ்ச்சியுடன் வாங்கி உண்டு ,,கருணை என்னும் மத நீரை வெள்ளமாக பொழிகின்ற 'சித்தியானை '--வணங்கி --நமக்கு வரும் துன்பங்களை தீர்த்துக்கொள்வோம் .
******************************************************************************************************************************************************************
முருகக்கடவுள்
பாடல் --16
கறங்குதிரைக் கருங்கடலுங் காரவுணப்
பெருங்கடலுங் கலங்கக் கார்வந்
துறங்குசிகைப் பொருப்புஞ்சூ ருரப்பொருப்பும்
பிளப்பமறை யுணர்ந்தோ ராற்றும்
அறங்குரவு மகத்தழலு மவுணமட
வார்வயிற்றி னழலு மூள
மறங்குலவு வேலெடுத்த குமரவேள்
சேவடிகள் வணக்கஞ செய்வாம். (16)
விளக்கம் --16
மழைமேகங்கள் வந்து உறக்கம் கொள்ளும் அளவு உயர்ந்து விளங்கிய கிரௌஞ்ச மலை சிகரமும் ,மலைபோல் உறுதியான 'சூரபத்மனின் 'மார்பும் பிளந்திட --
நான்கு வேதங்களை கற்று உணர்ந்தவர்கள் ,அதில் கூறப்பட்டுள்ள விதிகளை பின்பற்றி அறத்துடன் செய்யும் வேள்வித்தீயும் ,அரக்க பெண்களின் வயிற்றில் மிக்க துன்பத்தால் ஏற்படும் தீயும் ,,நன்கு பற்றி அணையாமல் 'திகுதிகு 'என்று முழங்கி எரிய ----
வீரம் கொஞ்சி விளையாடும் 'வேலாயுதத்தை 'தன் திருக்கரத்தில் எடுத்த, இறைவனின் திருக்குமாரனாகிய 'குமரவேள் ' ஆகிய -வேலெடுத்த இளம் பாலகனின் --சிவந்த திருவடிகளை --வணக்கம் செய்வோம் .
******************************************************************************************************************************************************************
நாமகள்
பாடல் --17
பழுதகன்ற நால்வகைச்சொல் மலரெடுத்துப்
பத்திபடப் பரப்பித் திக்கு
முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி
பெறமுக்கண் மூர்த்தி தாளில்
தொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்
சூட்டவரிச் சுரும்புந் தேனுங்
கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத்தா
ளடிமுடிமேற் கொண்டு வாழ்வாம். (17)
விளக்கம் ---17
மலர்கள் ,எல்லாத்திசைகளிலும் பரப்பும் இனிய மணத்தை போன்ற __ பொருட்சுவையோடு , வரிசை வரிசையாக ஒன்றுசேர்த்து -----
மூன்று கண்களை உடைய இறைவனின் சிறப்பு மிக்க தோள்களில் --அன்பென்னும் நாரினால் ,பெரிய மாலை போல் தொடுத்து சூட்ட ----
வண்டுகள் இசைப்பாட ,இனிய தேன் நிறைந்து ,அகன்ற இதழ்களுடன் விளங்கும் வெண்தாமரை மலரில் வீற்றிருக்கும் 'நாமகளாம் சரஸ்வதி தேவியின்'திருவடிகளை நம்முடைய தலை மேல் வைத்துக்கொண்டு வணக்கத்துடன் வாழ்வோம் .
*********************************************************************************
திருநந்தி தேவர்
பாடல் --18
வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுட கோடி
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் றாக்கி
அந்தியும் பகலுந் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம். (18)
விளக்கம் --18
இறைவன் திருவடிகளில் வந்து வணங்கிடும் கோடிக்கணக்கான தேவர்களின் கிரீடங்கள் ,கீழே விழும் மணிகள் நாலாபக்கமும் சிதறி ஓடுவதுபோல் சிதற ,அவர்களை தன்னுடைய சிவகணங்கள் என்னும் படையால் விரட்டி ,அந்த இடத்தை தூய்மையாக்கி ----
அந்த திருவடிகளில் -- பக்தர்கள்,இரவும் பகலும் தங்களுடைய பக்தியால் கோலமிட்டு பலவித ஆராதனைகளையும் செய்து --- அந்த இடத்தை குப்பைபோல ஆக்குவதை அனுமதிக்கும் ----
நந்தியெம்பெருமானின் ஒளிவீசும் பாதங்களின் மீது நம் தலையை வைத்து வணங்குவோம் ...
*********************************************************************************
ஆளுடைய பிள்ளையார்
பாடல் --19
கடியவிழ் கடுக்கை வேணித் தாதைபோற் கனற்கண் மீனக்
கொடியனை வேவ நோக்கிக் குறையிரந் தனையான் கற்பிற்
பிடியன நடையாள் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த
முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம். (19)
விளக்கம் --19
தந்தையான சிவபெருமான் --
மீன்கொடியை கொண்ட பாண்டிய மன்னன் வெப்புநோயால் வருந்துமாறு அருள்புரிய --
அந்தமன்னனின் மனைவியான ,பெண்யானையை போன்ற நடையை உடைய ,கற்பில் சிறந்த பெண்ணான 'மங்கையர்க்கரசியார் '--தன்னுடைய கணவரின் குற்றத்தை பொறுத்து துன்பம் தீர்க்க வேண்ட ---
அந்த பாண்டிய மன்னனின் துயர் தீர்த்து ,உயிரளித்து காப்பாற்றிய ,மாடமாளிகைகளால் சிறப்புற்று விளங்கும் 'சீர்காழி 'யில் அவதரித்த முனிவரான 'திருஞானசம்பந்த பெருமானுக்கு 'வணக்கம் செய்வோம் .
*********************************************************************************
ஆளுடைய அரசர் [திருநாவுக்கரசர் ]
பாடல் --20
அறப்பெருஞ் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தா லஞ்சா*
மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சக ரிட்ட நீல
நிறப்பெருங் கடலும் யார்க்கு நீந்துதற் கரிய வேழு
பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம். (20)
விளக்கம் ---20
நல்லறத்திற்கு புறம்பான தீய செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடும் தன்மை கொண்ட கொடுமணம் மிகுந்த சமணர்கள் ---பெரிய கல்லினால் கட்டி போட்ட நீலப்பெருங்கடலையும் -----
கருமை நிறம் கொண்ட ,கடந்து செல்ல மிகமிக கடினமான ,,ஏழு பிறவிக்கடலையும் --எளிதில் கடந்து கரை ஏறிய
போற்றுவதற்கரிய பிரானான 'திருநாவுக்கரசரின் 'திருவடிகளுக்கு வணக்கம் செய்வோம் .
*********************************************************************************
ஆளுடையநம்பிகள் [சுந்தரமூர்த்தி ]
பாடல் --21
அரவக லல்கு லார்பா லாசைநீத் தவர்க்கே வீடு
தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் தன்னைப்
பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
இரவினிற் றூது கொண்டோ னிணையடி முடிமேல் வைப்பாம். (21)
விளக்கம் --21
தலைவனான சிவபெருமானையே ----
பரவை நாச்சியார் ,தன்மீது கொண்ட ஊடலை தீர்க்கும் படி ,பேயும் உறங்கும் நள்ளிரவில் தூதுவனாக அனுப்பும் அளவுக்கு இறைவனின் அன்பைன்னும் அருளைப் பெற்ற----
'சுந்தரமூர்த்தி நாயனாரின் 'இணைந்த திருவடி மீது நம் தலையை வைத்து வணங்குவோம் .
*********************************************************************************
ஆளுடைய அடிகள் [மாணிக்க வாசகர் ]
பாடல் --22
எழுதரு மறைகள் தேறா இறைவனை யெல்லிற் கங்குற்
பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து
தொழுதகை தலைமீ தேறத் துளும்புகண் ணீருள் மூழ்கி
அழுதடி யடைந்த வன்ப னடியவர்க் கடிமை செய்வாம். (22)
விளக்கம் --22
இரவு பகல் முதலான ஆறு காலங்களிலும் இடைவிடாது ,தலைமீது கூப்பிய கரத்துடன் ,கண்களில் கண்ணீர் வழிந்து ததும்ப ததும்ப ---அந்த கண்ணீரிலேயே மூழ்கி ---அழுது அழுது ---வணங்கி --
அந்த இறைவனின் தரிசனத்தை பெற்று அவர் திருவடியையே அடைந்த இறைஅன்பரான 'மாணிக்கவாசகர் 'என்ற அடியவருக்கு அடிமை ஆவோம் .
குறிப்பு ;--
இப்பாடலின் மூலம் வேதங்களை படிப்பதால் மட்டும் இறைவனை காண முடியாது ---
மிக மிக ஆழ்ந்த --உள்ளத்தின் நடுப்பகுதியிலிருந்து
வற்றாத ஊற்று போல் பெருகி ஓடும் பக்தியினாலும் ,வேண்டுதல்களாலும் மட்டுமே இறைவனை காண முடியும் ---
என்று உணர்த்துகிறார்
*********************************************************************************
சண்டேசுரரும் மற்ற திருத்தொண்டர்களும்
பாடல் --23
தந்தைதா ளொடும்பிறவித் தாளெறிந்து நிருத்தரிரு தாளைச் சேர்ந்த
மைந்தர்தாள் வேதநெறி சைவநெறி பத்திநெறி வழாது* வாய்மெய்
சிந்தைதா னரனடிக்கே செலுத்தினராய்ச் சிவாநுபவச் செல்வ ராகிப்
பந்தமாந் தொடக்கறுத்த திருத்தொண்டர் தாள்பரவிப் பணிதல் செய்வாம். (23)
விளக்கம் ---23
வேதநெறி ,சைவநெறி ,பக்திநெறி வழுவாது ,,வாய் ,மெய் மற்றும் சிந்தை முதலியவற்றை 'அரன் ;ஆகிய சிவபெருமானின் திருவடிகளில் செலுத்தியதால் ---
சிவனின் அருளை அடைந்து ,அதை அனுபவிக்கும் செல்வராகி --பாசம் பந்தம் என்னும் கர்மவினை தொடர்ச்சியை அறுத்து அதிலிருந்து மீண்ட ---அனைத்து திருத்தொண்டர்கள் திருவடிகளில் பணிவுடன் விழுந்து வணங்குவோம் .
*********************************************************************************
கடவுள் வாழ்த்து
பொருள்எழுதியவர்
DR.S.வீரம்மா தேவி .MBBS
No comments:
Post a Comment